மதுரை மண்ணின் மைந்தன்... ‛சொக்கத்தங்கம்' விஜயகாந்த் பிறந்ததினம் இன்று | ஓணம் பண்டிகைக்கு வெளியாகும் கல்யாணி பிரியதர்ஷினின் 2 படங்கள் | பிரேமலு நடிகருக்கு காய்ச்சல் : படப்பிடிப்பை ரத்து செய்த மோகன்லால் | இங்கிலாந்தின் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த பாலகிருஷ்ணா | ஒளிப்பதிவாளர் விரல் துண்டானது ஆனாலும், மறுநாளே வந்தார்: ஏ.ஆர்.முருகதாஸ் | ‛ஆட்டி' பெயர் சொல்லும் படமாக இருக்கும் : அபி | நடிகர் சங்க புதுகட்டடம் : விஜயகாந்த் பெயர் சூட்டப்படுமா | தள்ளிப் போகிறதா துல்கர் சல்மானின் 'காந்தா' ? | சிறிய படங்களுடன் விநாயக சதுர்த்தி ரிலீஸ் | ரஜினியின் அடுத்த பட இயக்குனர் யார் ? |
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருபவர் நடிகை நித்யா ரவீந்திரன். இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் சினிமாவில் நடித்த காரணத்தால் தனது குழந்தை பருவத்தில் நடந்த சில மோசமான அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், 'எல்லா குழந்தைகளும் பள்ளி முடிந்து விளையாட செல்வார்கள். நான் நாடகம் நடிக்க சென்று விடுவேன். நான் நடிக்கிறேன் என்ற காரணத்தால் நான் பொய் பேசுவேன் என சொல்லி என்னிடம் வீட்டு குழந்தைகளை பழக விடமாட்டார்கள். ஆனால் குழந்தைகள் எல்லோருக்கும் என்னோட வயது என்பதால் அவர்கள் என்னிடம் உண்மையை போட்டு உடைத்து விடுவார்கள். அந்த காலத்தில் நடிகர், நடிகைகள் பற்றி அவ்வளவு சின்னத்தனமாக புத்தி கொண்டவர்கள் இருந்திருக்கிறார்கள்' என வருத்தத்துடன் பகிர்ந்துள்ளார்.
நித்யா ரவீந்திரன் மேடை நாடகங்களில் நடித்து அதன் பின் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 45 ஆண்டுகளில் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரைகளில் சிறந்த குணச்சித்திர நடிகையாக அறியப்படுகிறார். மேலும், தமிழ் எஃப் எம் ஒன்றுக்கு இயக்குநராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.