Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜெயலலிதா கொடுத்த செக்கை வாங்க மறுத்த ஆர்பி சவுத்ரி : நினைவுகளை பகிர்ந்த இயக்குனர் பாரதி கண்ணன்

07 மே, 2026 - 12:41 IST
எழுத்தின் அளவு:
Director-Bharathi-Kannan-shares-memories-of-RP-Chowdhury-refusing-to-accept-the-cheque-given-by-Jayalalithaa
Advertisement

தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி சாலை விபத்தில் மரணம் அடைந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரை சந்தித்து பேசியவர் இயக்குனர் பாரதி கண்ணன். அவரோடு கடைசியாக போட்டோ எடுத்த சினிமா பிரபலமும் அவர் தான். அந்த சந்திப்பில் என்ன நடந்தது என்றும், ஆர்.பி சவுத்ரி குறித்தும் பாரதி கண்ணன் கூறியதாவது :

‛கண்ணாத்தாள்' என்ற படம் எடுக்க என்னை நம்பி அப்போதே ஒரு கோடிக்கு மேல் பணம் கொடுத்தவர் ஆர்பி சவுத்ரி. பின்னர் திருநெல்வேலி படத்துக்கு எனக்கு உதவினார். எனக்கும் அவருக்கும் பல ஆண்டுகளாக நட்பு. சமீபத்தில் அவரை சந்தித்து பேசவில்லை. ஒரு நாள் இரவில் அவரை சந்திக்க வேண்டும் என்று திடீரென என் உள்ளுணர்வு சொல்லியது. அதை தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு அவரை ஆபீஸில் சந்தித்து பேசினேன். பல சினிமா நினைவுகளை பேசினோம் .

அப்போது எனக்கு வயதாகிவிட்டது கம்பெனிக்கு கதை கேட்க ஆட்கள் வேண்டும். நீ உதவி செய் என்றார். கதை கேட்க சம்பளமும் போட்டுக் கொடுக்கிறேன் என்றார். நானோ சம்பளம் வேண்டாம் உங்களுக்காக கதை கேட்கிறேன் என்றேன். பல்வேறு விஷயங்களை பேசிவிட்டு அவருடன் போட்டோ எடுத்து விட்டு கிளம்பும்போது ராஜஸ்தான் செல்கிறேன். அங்கே சென்று விட்டு வந்தவுடன் சந்திப்போம் என்றார். ஆனால் ராஜஸ்தானில் நடந்த விபத்தில் அவர் காலமானது வருத்தத்துக்குரியது.

ஆர்பி சவுத்ரியின் பெருமைகள் பற்றி அவரின் தனிப்பட்ட குணங்கள் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். ஒரு படத்தை அவர் தயாரித்தார். அந்த படம் பெரிய ஹிட், அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா இந்த படத்தை பார்க்க ஆசைப்பட அந்த படத்தின் காப்பியை அனுப்பி வைத்தார். ஆனால் ஏதோ தவறுதலாக அந்த படத்தை ஜெயா டிவியில் போட்டு விட்டார்கள். இதனால் படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர்கள் வருத்தப்பட்டார்கள். சவுத்ரிக்கு பெரிய இழப்பு. அதை கேள்விப்பட்ட அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, சவுத்ரியை அழைத்து ஒரு செக் கொடுத்து உங்களுக்கான இழப்பை இதில் எழுதிக் கொள்ளுங்கள் என்றார். ஆனால் சவுத்ரி அந்த செக்கை வாங்க மறுத்துவிட்டார். ஓரளவு படத்தின் வசூல் வந்து விட்டது. விநியோகஸ்தர்களிடம் நான் பேசிக் கொள்கிறேன் என்று பெருந்தன்மையுடன் வந்தார் அந்த குணம் பெரியது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
விஷ்ணு விஷால் நடிக்கும் 'இரண்டு வானம்' கதை இதுதான்: இயக்குனர் தகவல்விஷ்ணு விஷால் நடிக்கும் 'இரண்டு ... பிளாஷ்பேக்: பத்திரிகையாளர் படத்தின் நாயகனாக நடித்து, தோல்வியை சந்தித்த “ஸ்ரீ ராமானுஜர்” பிளாஷ்பேக்: பத்திரிகையாளர் படத்தின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

07 மே, 2026 - 07:05 Report Abuse
Sappanidurai Durai படம் நாட்டாமை
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap