ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! |
கேரள அரசு ஆண்டுதோறும் சிறந்த மலையாள திரைப்பட கலைஞர்களுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. விருதுக்குரியவர்களை தேர்வு செய்யும் கமிட்டிக்கு பெரும்பாலும் பிற மொழி சினிமா கலைஞர்களை நியமித்து வருகிறது. பாரதிராஜா, கே.பாக்யராஜ், பாலச்சந்தர், மகேந்திரன் உள்ளிட்ட பலர் தலைவராக இருந்துள்ளனர்.
இந்த நிலையில் 2020ம் ஆண்டுக்கான சிறந்த கலைஞர்களை தேர்வு செய்யும் கமிட்டிக்கு நடிகை சுஹாசினியை கேரள அரசு நியமித்துள்ளது. கமிட்டி தலைவராக ஒரு நடிகை நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை. இந்த கமிட்டியில் கன்னட இயக்குனர் சேஷாத்திரி, மலையாள இயக்குனர் பத்ரன், ஒளிப்பதிவாளர் முரளிதரன், இசை அமைப்பாளர் மோகன் சித்ரா, ஒளிப்பதிவாளர் ஹரிகுமார், கதாசிரியர் சசிதரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்.
நடிகை சுஹாசினி சென்னை சர்வதேச திரைப்பட விழா ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக பணியாற்றி வருகிறார். பல்வேறு சர்வதேச திரைப்பட விருது விழாவில் நடுவராக பணியாற்றி உள்ளார்.