தனுஷ் 56... தமிழரசன் பச்சமுத்து : அப்போ மாரி செல்வராஜ்? | தாய் கிழவி : சிங்கம் புலி நடிப்பை பாராட்டிய கமல் | தெலுங்கு, தமிழ் கலாசாரத்துடன் இணைந்திருக்கிறேன்! ஜான்வி கபூர் | போர் முழக்கம் : வடிவேலுவின் புதிய படம் | கமல் - ரஜினி இணையும் படம் குறித்து அனிருத் வெளியிட்ட அப்டேட்! | விஜய் சேதுபதியை இயக்கும் அஜித் பட இயக்குனர்! | போர் சூழல் : டாக்சிக் ரிலீஸ் ஜூன் 4ம் தேதிக்கு தள்ளி வைப்பு | ‛காற்றின் மொழி' இசையில்.... : ‛மெலோடி கிங்' வித்யாசாகர் பாடல்களை மறக்க முடியுமா? | பிளாஷ்பேக்: ராஜாஜி பாராட்டிய சிவாஜிகணேசன் | சிகரெட், மதுவை தொட்டதில்லை: சதீஷ் பெருமிதம் |

கொரோனா கால நெருக்கடியை சமாளிக்க விபிஎப் நிறுவனங்கள் வருகிற மார்ச் 31ந் தேதி வரை சலுகை கட்டணத்தை அறிவித்தது. அது தற்போது முடிவுக்கு வர இருக்கிறது. விபிஎப் கட்டணத்தை இனி தியேட்டர் உரிமையாளர்கள் தான் கட்ட வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இதற்கு தியேட்டர் அதிபர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. அதோடு தற்போது பெரும்பாலான படங்கள் ஓடிடி தளத்தில் வெளியிடும் திட்டத்துடன் இருக்கிறது.
விபிஎப் கட்டணம் மற்றும் ஓடிடி வெளியீடு தொடர்பாக தயாரிப்பாளர்களுக்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்கும் பனிப்போர் நடந்து வருகிறது. இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர ஆலோசனை கூட்டம் நாளை மறுநாள் (18ம் தேதி) நடக்கிறது. இந்த கூட்டத்தில் முக்கிய பிரச்சினைகள் பற்றி பேசப்படுவதால் உறுப்பினர்கள் அனைவரும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் உறுப்பினர்களுக்கு தனித்தனியாக கடிதம் அனுப்பி உள்ளது.




