‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

சினிமா நடிகர்கள், நடிகைகளின் ரசிகர்களாகப் பலரும் இருப்போம். ஆனால், தீவிர ரசிகர், வெறித்தனமான ரசிகர் என சிலரைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். அவர்கள் என்ன செய்வார்கள், தங்கள் அபிமான நடிகர்களின் படங்கள் வெளிவந்தால் கட் அவுட் வைப்பார்கள், பாலாபிஷேகம் செய்வார்கள். சரி, நடிகர்களுக்கு அப்படிச் செய்துவிடலாம், நடிகைகளுக்கு என்ன செய்வது ?.
ஒரு வெறித்தனமான ரசிகர், செய்தது என்ன தெரியுமா ?. தெலுங்கு, கன்னடத்தில் முன்னணி நடிகையாக இருக்கும் ராஷ்மிகா நடித்த 'பொகரு' படம் சமீபத்தில் வெளிவந்தது. அதற்காக படத்தின் பேனர் ஒன்றை வைத்திருக்கிறார்கள். அந்த பேனரில் இருக்கும் ராஷ்மிகாவுக்கு அவரது தலையில் இரண்டு முழம் மல்லிகைப்பூ வைத்து பூச்சூடி மகிழ்ந்திருக்கிறார் ஒரு ரசிகர்.
அவர் அப்படிச் செய்த வீடியோவை ரசிகர் ஒருவர் பதிவிட்டு ராஷ்மிகாவுக்கும் டுவிட்டரில் டெக் செய்துள்ளார். அதற்கு ராஷ்மிகா 'ஹார்ட்டின்' எமோஜி போட்டு பதிலளித்திருக்கிறார். இப்படியான ரசிகர்கள் இருப்பது ஆச்சரியமா, அதிர்ச்சியா ?.




