புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி |
பாகுபலி படங்களின் பிரம்மாண்டத்திற்கு பிறகு ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் படம் 'ஆர்ஆர்ஆர்'. ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட், அஜய் தேவகன், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிக்கும் படம் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய சுதந்திர போராட்ட காலக் கதையாக உருவாகி வரும் இப்படம் சுமார் 400 கோடி பட்ஜெட்டில் தயாராகி வருகிறது.
இப்படம் பற்றிய முக்கிய அறிவிப்பு ஒன்று இன்று வெளியாகும் என அறிவித்து இருந்தனர். அது படத்தின் வெளியீட்டு தேதியாக கூட இருக்கலாம் என நாம் சொல்லியிருந்தோம். ஆம் இப்போது அது உறுதியாகி உள்ளது. தசரா பண்டிகையை முன்னிட்டு அக்., 13ல் படம் வெளிவருவதாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும், ஹிந்தியிலும் இப்படம் வெளியாக உள்ளது. இதுதவிர இன்னும் சில மொழிகளில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
இந்த ''அக்., 13ல் நீரும், நெருப்பும் ஒன்றிணைந்து இதுவரை பார்த்திராத ஒரு புதிய அனுபவத்தை, இந்திய சினிமாவின் மிகப்பெரிய, மறக்கமுடியாத ஒரு அனுபவத்தை உங்களுக்கு வழங்க உள்ளது. சவாரி ஆரம்பம்'' என படக்குழு டுவிட்டரில் தெரிவித்துள்ளது. அதோடு புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். அதில் ஜுனியர் என்டிஆர் புல்லட்டிலும், ராம் சரண் குதிரையிலும் ஆக்ரோஷமாக சவாரி செய்கின்றனர். பின்னணியில் ஆர்ஆர்ஆர் என தலைப்பு இடம் பெற்றுள்ளது.