'டான் 3' சர்ச்சையை சமரசமாக முடிக்க ரன்வீர் சிங் முயற்சி | கமல்ஹாசனை தொடர்ந்து பிரைவேட் ஜெட்டை தவிர்க்கும் அல்லு அர்ஜுன் | தன்னை நிரூபிக்க விஜய்க்கு நேரம் கொடுக்க வேண்டும் ; சுரேஷ்கோபி ஆதரவு குரல் | 12 வருடங்களுக்கு பிறகு மீண்டும் டைரக்ஷனுக்கு திரும்பும் கிச்சா சுதீப் | எண்ட் கார்டு போட்டாலும் எழுந்திருக்காதீங்க ; 'காட்டாளன்' படக்குழு வேண்டுகோள் | தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு ஜோடியாகும் மமிதா பைஜூ! | ஜப்பானில் அனிமே விருது விழா : ஹாலிவுட் நடிகருக்கு ராஷ்மிகா அளித்த பதில் | 160 கோடியில் சொகுசு பங்களா கட்டி வரும் பிரபாஸ்! | ஜூன் திரைக்கு வரும் அருள்நிதியின் 'டிமான்டி காலனி-3' | கருப்பு வெற்றி : ஆர்ஜே பாலாஜியைப் பாராட்டிய ரஜினிகாந்த் |

தெலுங்கில் ராகுல் சங்கிரித்யன் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா அவரது 14வது படமாக புதிய படத்தில் நடித்து வருகிறார். நேற்று குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த படத்திற்கு 'ரணபலி' என தலைப்பு வைத்துள்ளதாக முதல் பார்வை மற்றும் அறிமுக வீடியோ உடன் அறிவித்துள்ளனர். இதை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் டி சீரியஸ் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.
இது பீரியட் டிராமா ஜானரில் உருவாகிறது. இந்த அறிமுக வீடியோவின் படி பார்த்தால், இப்படம் 1876ம் ஆண்டு காலகட்டத்தில் மெட்ராஸ் பிரசிடென்சியில் ஆங்கிலேயர் ஆட்சி காலகட்டத்தில் தென்னிந்தியாவில் அவர்கள், இந்தியர்களின் நிலத்தை கைப்பற்றியது என பல விஷயங்கள் குறித்து பேசுவது போல் தெரிகிறது. மேலும், இப்படத்தை 'தி கர்ஸ்ட் லேண்ட் சப்த பூமி' என்கிற நாவலை தழுவி உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது .
இதில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். தி மம்மி படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான அர்னால்ட் வோஸ்லு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வருகிற செப்டம்பர் 11ம் தேதியன்று 5 மொழிகளில் திரைக்கு வருகிறது என குறிப்பிட்டுள்ளனர்.




