மார்ச் 27ம் தேதியன்று திரைக்கு வரும் ஹாப்பி ராஜ்! | சொன்ன தேதிக்கு முன்பே திரைக்கு வருகிறது 'உஸ்தாத் பகத்சிங்' | 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக நடிக்கும் ரைசா வில்சன் | ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடிக்கும் ப்ரீத்தி முகுந்தன் | நடிகர் ஆனார் அஜித் அண்ணன் | பிளாஷ்பேக்: சிங்கிள் ஷாட் சண்டை காட்சியில் முதலில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக்: திடீரென காணாமல் போன பேபி உமா | தள்ளிப் போன “ஜனநாயகன், டாக்சிக்” ; 1000 கோடி முடக்கம்? | 'மைதிலி என்னை காதலி' நடிகர் மறைவு: டி.ராஜேந்தர் இரங்கல் | 'கே. சங்கர் 100' : நூற்றாண்டு கால இந்திய சினிமாவின் சிற்பிகளில் ஒருவர் |

ஏ.பி.நாகராஜன் என்றாலே நமக்கு அவர் இயக்கிய தில்லானா மோகனாம்பாள், திருவிளையாடல், கந்தன் கருணை, திருமால் பெருமை போன்ற புராண படங்கள் தான் நினைவுக்கு வரும். தில்லானா மோகனாம்பாள் இன்றைக்கும் தமிழ் சினிமாவின் டாப் டென் படங்களில் ஒன்றாக இருக்கிறது. ஏ.பி.நாகராஜன் சினிமாவில் அறிமுகமானது நடிகராகத்தான். அதுவும் முதல் படத்திலேயே ஹீரோவாகத்தான். அக்கம்மாபேட்டை பரமசிவன் நாகராஜன் என்பதன் சுருக்கம்தான் ஏ.பி.நாகராஜன். நாடக் துறையில் இருந்து திரைப்படத் துறைக்கு வந்தவர்.
அவர் தனது பழனி கதிரவன் நாடக சபா மூலம் 'நால்வர்' என்ற நாடகத்தை நடத்தினார். இந்த நாடகம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அதைத் திரைப்படமாக்க நினைத்தார். படத்தை தயாரிக்க முன்வந்தார், தயாரிப்பாளர் எம்.ஏ.வேணு. படத்திற்காக கதையில் சிற் சில மாற்றங்களை செய்து திரைக்கதை எழுதி நாயகனாகவும் நடித்தார். வி.கிருஷ்ணன் இயக்கினார். கே. வி. மகாதேவன் இசையமைத்தார்.
ஒரு பெரிய ஆலையில் கணக்காளராக இருப்பவருக்கு 4 மகன்கள் (நால்வர்). மூத்தவர் போலீஸ் அதிகாரி (ஏ.பி.நாகராஜன்) இரண்டாவது மகன் வழக்கறிஞர், மூன்றாவது மகன் அவர்களது தந்தை பணிபுரியும் அதே ஆலையில் மேற்பார்வையாளர். கடைசி மகன் ஒரு சமூக ஆர்வலர். தந்தை வேலை செய்யும் ஆலையில் நடக்கும் அக்கிரமங்களை இவர்கள் எதிர்த்து போராடுகிறார்கள்.
ஒரு கட்டத்தில் தந்தை மீது ஒரு புகார் வருகிறது. நேர்மையான காவல்துறை அதிகாரியான ஏ.பி.நாகராஜன் தன் தந்தை நிரபராதி என்பதை எப்படி நிரூபிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. குமாரி தங்கம், என்.என்.கண்ணப்பா, கே.எஸ்.கிருஷ்ணன், எஸ்.ஆர்.ஜானகி, ஆர்.பாலசுப்ரமணியம், சி.ஆர்.விஜயகுமாரி, டி.பி.முத்துலட்சுமி, வி.எம்.ஏழுமலை உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.




