தனுஷ் 56... தமிழரசன் பச்சமுத்து : அப்போ மாரி செல்வராஜ்? | தாய் கிழவி : சிங்கம் புலி நடிப்பை பாராட்டிய கமல் | தெலுங்கு, தமிழ் கலாசாரத்துடன் இணைந்திருக்கிறேன்! ஜான்வி கபூர் | போர் முழக்கம் : வடிவேலுவின் புதிய படம் | கமல் - ரஜினி இணையும் படம் குறித்து அனிருத் வெளியிட்ட அப்டேட்! | விஜய் சேதுபதியை இயக்கும் அஜித் பட இயக்குனர்! | போர் சூழல் : டாக்சிக் ரிலீஸ் ஜூன் 4ம் தேதிக்கு தள்ளி வைப்பு | ‛காற்றின் மொழி' இசையில்.... : ‛மெலோடி கிங்' வித்யாசாகர் பாடல்களை மறக்க முடியுமா? | பிளாஷ்பேக்: ராஜாஜி பாராட்டிய சிவாஜிகணேசன் | சிகரெட், மதுவை தொட்டதில்லை: சதீஷ் பெருமிதம் |

முத்தைத்தரு பத்தித் திருநகை, அத்திக்கிறை சத்திச் சரவண, முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்...'
'சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடை உடுத்தி, சிவகங்கை குளத்தருகே ஸ்ரீதுர்கை சிரித்திருப்பாள்...'
'ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்...'
'இரவும் வரும் பகலும் வரும் உலகம் ஒன்றுதான்'
'வருவேன் நான் உனது வாசலுக்கே...'
'உள்ளத்தின் கதவுகள் கண்களடா, இங்கே உறவுக்கு காரணம் பெண்களடா...'
'குத்தாலம் அருவியிலே குளிச்சது போல் இருக்குதாக...'
'ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே...'
இப்படியான பாடல்களை அடிக்கடி ரசித்து கேட்போம். இதற்கு இசை அமைத்திருப்பது எம்.எஸ்.விஸ்வநாதன் அல்லது கே.வி.மகாதேவன் என்றே பலரும் நினைத்திருப்போம். ஆனால் இதற்கு இசை அமைத்தது டி.ஆர்.பாப்பா. குறைவான படங்கள், குறைவான பாடல்களுக்கு இசை அமைத்திருந்தபோதும் அத்தனை பாடல்களையும் ஹிட் பாடலாக கொடுத்த ஒரே இசை அமைப்பாளர் டி.ஆர்.பாப்பாதான்.
மிகப்பெரிய வயலின் வித்வானாகத் திகழ்ந்து, இசையமைப்பாளராக உயர்ந்தவர். திருத்துறைப்பூண்டிதான் சொந்த ஊர். அப்பா பெயர் ராதாகிருஷ்ணன். இவருடைய பெயர் சிவசங்கரன். ஆனால், 'பாப்பா' என்றுதான் அழைப்பார்கள். ஆகவே அவர் டி.ஆர்.பாப்பா என்றே அழைக்கப்பட்டார்.
மலையாளப் படமான 'ஆத்ம காந்தி' என்ற படத்தின் மூலம் இசை அமைப்பாளர் ஆனார். 2004ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதி 82வது வயதில் காலமானார். நேற்று அவரது 20வது நினைவு நாள்.




