ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் |

மலையாளத் திரையுலகத்தில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் பற்றிய விசாரணையை மேற்கொள்ள கேரள மாநில அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி ஹேமா தலைமையிலான குழுவின் 233 பக்கங்கள் கொண்ட அறிக்கை ஆர்டிஐ மூலம் சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்தது. 2017ம் ஆண்டில் மலையாள நடிகை ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான வழக்கு காரணமாக அந்த விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. பல்வேறு கட்ட விசாரணைகளுக்குப் பிறகு அந்த குழு 2019ம் ஆண்டே அந்த அறிக்கை கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் வழங்கியது. இத்தனை ஆண்டுகள் தாமதத்திற்குப் பிறகு அறிக்கை வெளியானது குறித்து பல்வேறு சந்தேகங்களும் கிளம்பியுள்ளது.
ஐந்து ஆண்டுகளாக இந்த அறிக்கையை அப்படியே வைத்திருந்து வெளியிடாமல் இருந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் கூட குற்றம் சாட்டினார். ஹேமா கமிட்டியின் அறிக்கைக்குப் பிறகு பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய புலனாய்வுக் குழு ஒன்றை கேரள அரசு தற்போது அமைத்துள்ளது.
செப்டம்பர் 10ம் தேதிக்குள் மாநில அரசு சீலிடப்பட்ட கவரில் முழு அறிக்கையையும் சமர்ப்பிக்க வேண்டும் என கேரள உயர்நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஹேமா கமிட்டி அறிக்கையைத் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் இப்போது வெளிவர ஆரம்பித்துள்ளன. அதைத் தொடர்ந்து மலையாள நடிகர் சங்கத்தின் செயலாளரான சித்திக் ராஜினாமா செய்தார். மலையாள சினிமா அகாடமி தலைவர் ரஞ்சித்தும் ராஜினாமா செய்தார்.
இந்த விவகாரம் தற்போது இந்தியத் திரையுலகம் முழுவதுமே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குனரும் அடிக்கடி சர்ச்சைக் கருத்துக்களைப் பதிவு செய்பவருமான ராம்கோபால் வர்மா இது குறித்து, “மலையாள சினிமாத் துறைக்காக மட்டுமே அமைக்கப்பட்ட ஹேமா கமிட்டியால் மலையாளத் திரையுலகம் அம்பலமாகிவிட்டது. மற்ற மொழிகள் ஒவ்வொன்றுக்கும் கமிட்டிகள் அமைக்கப்படாவிட்டால், அங்கு என்ன நடக்கிறது என்பதை எப்படி தெரிந்து கொள்ள முடியும்,” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.