'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடி தானா? | கென் கருணாஸூக்காக காய்ச்சல் உடன் வந்த தனுஷ்! | மார்ச் 16ல் 'நூறு சாமி' படத்தின் பர்ஸ்ட் லுக் | இரண்டு பாகங்களாக பிரியும் இதயம் முரளி! | மே மாதத்தில் திட்டமிடும் 'கருப்பு' படக்குழு! | மென்மையானவர் விஜய்... நல்ல குடும்பஸ்தர் அஜித்: மனம் திறந்த தமன்னா | 'திரு.மாணிக்கம்' திரைக்கதை புத்தகமாக வெளியீடு | தெலுங்கானா டிக்கெட் கட்டண உயர்வு : தடையை நீக்கிய உச்சநீதிமன்றம் | 3 படங்கள் 1000 கோடி முதலீடு, மீண்டு வருமா தயாரிப்பு நிறுவனம் ? | முதல்வர் ஸ்டாலினின் வாழ்க்கை படமாகிறது: சமுத்திரக்கனி இயக்குகிறார்? |

தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அல்லு அர்ஜுன். இரு தினங்களுக்கு முன்பு நந்தியால் சென்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் அவரது நண்பர் ரவிசந்திர கிஷோர் ரெட்டிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அது பவன் கல்யாண் ரசிகர்களை எரிச்சலடையச் செய்தது. பவன் கல்யாண், அல்லு அர்ஜுன் இருவரும் உறவினர்கள் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. இருப்பினும் அல்லு அர்ஜுன் பவன் கல்யாணுக்கு வாழ்த்து தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார்.
இன்று ஆந்திரா மாநில சட்டசபைத் தேர்தல் மற்றும் லோக்சபா தேர்தல், தெலங்கானா லோக்சபா தேர்தலுக்கான வாக்குபதிவு நடைபெற்று வருகிறது. ஐதராபாத்தில் உள்ள ஜுபிளி ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ள ஓட்டுச்சாவடியில் தனது ஓட்டினை பதிவு செய்த அல்லு அர்ஜுன் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “நான் எந்தக் கட்சியையும் சாராதவன் என்பதை உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். அனைத்து கட்சிகளுக்கும் பொதுவானவன் நான். தயவு செய்து அனைவரும் வந்து ஓட்டு போடுங்கள். இன்றைய நாள் நமக்கு பொறுப்பான நாள். வெயில் தாக்கம் அதிகம் இருக்கிறது. இருந்தாலும் நமது நாட்டை அடுத்த ஐந்து வருடங்களுக்கான முக்கியமான நாள் இன்று,” என்று தெரிவித்தார்.




