‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் சுதீப். ‛நான் ஈ, புலி, முடிஞ்சா இவன புடி' போன்ற படங்களின் மூலம் தமிழிலும் அறிமுகமானார். 'விக்ராந்த் ரோணா' என்ற பான் இந்தியா படத்தில் சமீபத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் நடந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜ.வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். இந்த நிலையில் கன்னட தயாரிப்பாளர் எம்.என்.குமார் என்பவர் சுதீப் மீது கன்னட சினிமா வர்த்தக சபையில் 9 கோடி ரூபாய் மோசடி புகார் கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக தயாரிப்பாளர் குமார் கூறியிருப்பதாவது : சுதீப் நடிப்பில் புதிய படம் தயாரிக்க முடிவு செய்து 8 ஆண்டுகளுக்கு முன்பே அவருக்கு பேசிய முழு சம்பளத்தையும் கொடுத்து விட்டேன். சுமார் ரூ.9 கோடி வரை கொடுத்துள்ளேன். ஆனால் இதுவரை அவர் எனது படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுக்கவில்லை. என்னை கைவிட்டு விட்டார்.
ஏற்கனவே அவரிடம் பேசியபோதெல்லாம் எனது படத்தில் நடிப்பதாக தெரிவித்தார். இப்போது அவரிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. அவருடையை வீட்டுக்கு சென்றால் சுதீப் வீட்டில் இல்லை என்று சொல்கிறார்கள். செல்போன் நம்பரையும் மாற்றி விட்டார். இரு தினங்களுக்குள் எனக்கு முடிவு தெரியவில்லை என்றால் சுதீப் வீட்டின் முன்னால் முற்றுகை போராட்டம் நடத்துவேன்'' என்றார்.
சுதீப் மீதான இந்த திடீர் புகார் கன்னட திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




