அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விஷால் | பிரதீப் ரங்கநாதன் , அட்லி புதிய கூட்டணி! | '7ஜி ரெயின்போ காலனி 2' படத்தில் கேமியோ ரோலில் சோனியா அகர்வால் | 'வாரணாசி' படத்திற்காக அமெரிக்கா பறந்த ராஜமவுலி! | முறுக்கு மீசை, நீளமான முடி புதிய தோற்றத்தில் அருண் விஜய்! | 'ஜெயிலர் 2' படத்தில் எந்தவொரு பாலிவுட் நடிகரும் இல்லை! | முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கும் சாய் பல்லவி! | 'யாமிருக்க பயமே' இயக்குனருடன் கைகோர்க்கும் நித்யா மேனன்! | 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் நாங்கள் எடுத்த ரிஸ்க்: கமல்ஹாசன் | மே மாதப் படங்கள்: 2026ன் முதல் வசூல் வெற்றி |

தமிழ் நடிகைகளில் ஐஸ்வர்யா ராஜேஷ் மட்டும் கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் விதமான படங்களை மட்டுமே அதிக அளவில் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள சொப்பன சுந்தரி திரைப்படம் அடுத்து வெளியாக இருக்கிறது. எப்போதும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் தனது படங்கள் குறித்த தகவல்களை வெளியிடுவதையும் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளிப்பதையும் வாடிக்கையாக வைத்துள்ளார்.
இந்த நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு அவரது டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு விட்டது என்று அவரது மக்கள் செய்தி தொடர்பாளர் ஒரு தகவலை வெளியிட்டார். மேலும் ஐஸ்வர்யா ராஜேஷின் கணக்கு மீண்டும் விரைவில் திரும்ப பெறப்படும் என்றும் அதுவரை அதில் வெளியாகும் பதிவுகளுக்கு ரசிகர்கள் பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இது குறித்து டுவிட்டர் உரிமையாளரான எலன் மாஸ்க்கிற்கும் புகார் ஒன்றை அனுப்பி, ஐஸ்வர்யா ராஜேஷின் டுவிட்டர் கணக்கை விரைவில் மீட்டு தந்தால் நன்றாக இருக்கும் என்று வேண்டுகோளும் வைத்திருந்தனர். இந்த நிலையில் அடுத்த நாளே ஹேக் செய்யப்பட்ட தனது டுவிட்டர் கணக்கு தன்வசம் வந்து விட்டதாக கூறி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.