சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது |
வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்தா நடித்துள்ள படம் ‛வாத்தி'. ஆடுகளம் நரேன், சமுத்திரகனி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். தெலுங்கில் இந்தப்படம் சார் என்ற பெயரில் வெளியாகிறது. ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படம் பிப்., 17ம் தேதி வெளியாக உள்ள நிலையில் சமீபத்தில் சென்னையில் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடந்தது. இந்நிலையில் இன்று(பிப்., 8) மாலை 6:30 மணியளவில் டிரைலரை இரு மொழியிலும் வெளியிட்டனர்.
கல்வித்துறையில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டும் படமாகவும், கல்வி எப்படி வியாபாரமாக உள்ளது. அதனால் மாணவர்கள் எப்படி பாதிக்கப்படுகின்றனர் என்பதை எடுத்துரைக்கும் படமாக உருவாகி இருப்பதை டிரைலரை பார்க்கும் போதே புரிகிறது. தனுஷ் கண்டிப்பான, மாணவர்களுக்காக குரல் கொடுக்கும் வாத்தியாராகவும், சக ஆசிரியையான சம்யுக்தாவை காதலிக்கும் ஜாலியான நபராகவும் நடித்துள்ளார். சமுத்திரகனி வில்லத்தனம் செய்கிறார்.
‛‛தரமான கல்வி கொடுக்கணும்னா காசு கொடுக்கணும்..., படிக்கணும் என்கிற ஆசை எவனுக்கு வந்தாலும் பணம் கட்டுனா தான் படிப்பு கிடைக்கும்..., கல்வியில் கிடைக்கும் காசு அரசியலில் கிடைக்காது..., பணம் எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம், ஆனால் படிப்பு மட்டும் தான் மரியாதையை சம்பாதித்து தரும்....'' என்பது போன்று வசனங்களும் டிரைலரில் இடம் பெற்று இருப்பது ரசிகர்களை கவர்ந்துள்ளது.