பிகினி தோற்றம் : கிரித்தி சனோன் வெளியிட்ட தகவல் | ராம்சரண் மனைவியிடம் இருந்து திரிஷாவுக்கு பறந்து வந்த பரிசுப் பெட்டகம் | ஜனநாயகன் லீக் விவகாரம் : மேலும் ஒருவர் கைது | 'மாம் 2' படப்பிடிப்பில் குஷி கபூரின் நடிப்பால் அதிருப்தியில் படக்குழுவினர் | அம்மா இறந்த ஒரு வாரத்திற்குள் ரேஸிங்கில் இறங்கிய அஜித் குமார் | ஒருவர் சம்பாதித்தால் போதும் ; மகனின் மனோபாவம் குறித்து மோகன்லால் பெருமிதம் | 'திரிஷ்யம்' நடிகையின் புகாரை விசாரிக்க ஐவர் குழு அமைத்த ஸ்வேதா மேனன் | சத்ரபதி சிவாஜி டீசர்ட் அணிந்து நடனமாடியதற்கு மன்னிப்பு கேட்ட ஜெனிலியாவின் கணவர் | வெளி மாநிலங்களில் 70 கோடி வசூலித்த 'கருப்பு' | ஓடிடியில் மீண்டும் 'துரந்தர்': இந்த வாரம் மிஸ் பண்ணிடாதீங்க...! |

அட்லி இயக்கத்தில் புதிய படத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடித்து வருகிறார். கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு கடந்த வருடம் தொடங்கிய நிலையில் ஷாருக்கான் மகன் போதை பொருள் வழக்கில் சிக்கியதால் நிறுத்தப்பட்டது. படம் கைவிடப்பட்டதாகவும் வதந்தி பரவியது.
இந்த நிலையில் தற்போது படப்பிடிப்பை மீண்டும் தொடங்கி உள்ளனர். சமீபத்தில் நயன்தாராவும் மும்பை சென்று படப்பிடிப்பில் கலந்துகொண்டார். இந்த படத்தில் யோகிபாபுவும் நடிப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் சமூக வலைதளத்தில் யோகிபாபுவிடம், ஷாருக்கான் படத்தில் நடிக்கிறீர்களா என்று ரசிகர் ஒருவர் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு ஆம் நடிக்கிறேன் என்று யோகிபாபு பதில் அளித்துள்ளார்.




