நாங்க இருக்கிறோம், ஆதரவு கொடுக்கிறோம் : அஜித்தை பார்க்க செல்லும் திரைபிரபலங்கள் | ரீ ரிலீஸில் மோதும் விஜய், அஜித் | சூர்யாவுக்கு வைத்திருந்த 'இரும்புக் கை மாயாவி', கை மாறிவிட்டதா ? | துரந்தர் 2 ஒத்தி வைக்கப்படவில்லை : வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் | பிரபாஸின் ஸ்பிரிட் பட ரிலீஸ் தேதி வெளியானது | ஜனவரி 23ல் ஓடிடியில் வெளியாகும் சிறை | கவலையில் கிர்த்தி ஷெட்டி, பிரார்த்தனா, நிதி அகர்வால், மாளவிகா மோகனன் | மெளனம் பேசியதே ரீ ரிலீஸ் ஆகிறது | அடுத்தடுத்து தனுஷ் மீது தொடரும் அவதூறுகள் | ஹீரோயின் விஷயத்தில் பிரதீப் ரங்கநாதன் கில்லாடி |

பிரசாந்த் நீல் இயக்கிய கேஜிஎப், கேஜிஎப் -2 என்ற இரண்டு மெகா படங்களையும் தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தற்போது பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் சலார் படத்தை தயாரித்து வருகிறது. அடுத்து இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கெங்கரா அடுத்து இயக்கும் படத்தையும் இந்த நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கடந்த 21ஆம் தேதி ஒரு தகவல் வெளியிட்டனர்.
இந்த நிலையில் கன்னடத் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான ராஜ்குமாரின் பேரன் யுவராஜ் குமார் அறிமுகமாகும் படத்தை தாங்கள் தயாரிக்க இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த யுவராஜ் குமார் நடிகர் ராஜ்குமாரின் இரண்டாவது மகனும் நடிகருமான ராகவேந்திராவின் மகன் ஆவார். இந்த படத்தை கன்னட சினிமாவில் ராஜகுமாரா, மிஸ்டர் அண்ட் மிஸஸ் ராமச்சாரி என பல படங்களை இயக்கியுள்ள சந்தோஷ் ஆனந்த் ராம் இயக்குகிறார். மேலும், இந்த யுவராஜ் குமாருக்கு சமீபத்தில் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் சித்தப்பா ஆவார்.




