துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
கடந்த 2016ம் ஆண்டு வெளியான பட்டதாரி என்கிற படத்தில் இணைந்து நடித்தவர்கள் அபி சரவணன் மற்றும் அதிதி மேனன். தற்போது அபி சரவணன் விஜய் விஷ்வா என தனது பெயரை மாற்றிக் கொண்டு படங்களில் நடித்து வருகிறார். அதேபோல அதிதி மேனன் தற்போது மிர்னா மேனன் என தனது பெயரை மாற்றிக் கொண்டு மலையாள படங்களில் நடித்து வருகிறார்.
பட்டதாரி படத்தில் நடித்த போது இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது. பின் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணம் முடிந்து 3 வருடங்களுக்கு பிறகு அபி சரவணனுக்கும் தனக்கும் திருமணம் நடக்கவில்லை என்றும் போலியான சான்றிதழ்களை வைத்து தன்னை அவர் மிரட்டுகிறார் என்றும் காவல்துறையில் புகார் அளித்தார் அதிதி மேனன். அபி சரவணனுக்கு முன்பே பல பெண்களுடன் தொடர்பு இருந்தது என்றும் அவர் அந்த புகாரில் கூறியிருந்தார்.
இதை தொடர்ந்து மிர்னா மேனன் மீது அபி சரவணன் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அபி சரவணன் கொடுத்த அந்த வழக்கில் எந்த முகாந்திரமும் இல்லை எனக்கூறி அந்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் மிர்னா மேனன். இந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது.
மேலும் கடந்த டிசம்பர் 22, 2021 அன்று இந்த வழக்கில் தீர்ப்பு கிடைத்துள்ளது. அந்த தீர்ப்பில் மிர்னாவும் அபி சரவணனும் திருமணம் செய்து கொண்டது உண்மைதான் என்றும் இரண்டு மாதத்திற்குள் அபி சரவணனுடன் இணைந்து மிர்னா மேனன் வாழ வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இதுகுறித்து அபி சரவணன் நேற்று கூறியதாவது: மிர்னா மேனன் எனது சட்டபூர்வமான மனைவி என்று நான் நீதிமன்றத்தில் நிரூபித்தேன். அதற்கான தீர்ப்பு தான் இப்போது வந்துள்ளது. என் காதல் உண்மையானது. உண்மையான என் காதலை புரிந்துகொண்டு அவர் மீண்டும் என்னிடம் திரும்பி வந்தால் என்னைவிட சந்தோஷப்படும் நபர் வேறு யாருமில்லை என்றார்.