துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
சென்னை: நடிகர் விஜய்யின் உறவினரும், தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோவின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'மாஸ்டர்' திரைப்படத்தை தயாரித்தவர் சேவியர் பிரிட்டோ. நடிகர் விஜய்யின் உறவினரான இவர் ஏற்கனவே சில படங்களை தயாரித்தும், விநியோகம் செய்தும் உள்ளார். திரைப்படங்களின் முதலீடு தவிர மற்ற சில தொழில்களும் செய்து வருகிறார் சேவியர் பிரிட்டோ.
இவர் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து இன்று (டிச.,22) வருமான வரித்துறை அதிகாரிகள் இவரது வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். சேவியர் பிரிட்டோவின் வீடு மட்டுமல்லாமல், சென்னை மற்றும் பெங்களூருவில் உள்ள அவரது அலுவலகங்களிலும் சோதனை நடந்து வருகிறது.
சீன நிறுவனமான சியோமி, ஓப்போ நிறுவனங்களுக்கு சொந்தமான 25 இடங்களில் நேற்று முதல் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. அதன் எதிரொலியாக செல்போன் நிறுவனத்தின் ஏற்றுமதி, இறக்குமதியை சேவியர் பிரிட்டோவின் நிறுவனம் கையாளுவதால் இந்த சோதனை நடப்பதாக கூறப்படுகிறது.