பாடகி எஸ் ஜானகி மகன் முரளி மறைவு | சில நடிகைகளுக்கு நடிக்க தெரியவில்லை : யாரை சொல்கிறார் மாளவிகா மோகனன் | பல மொழி கற்பது : ஆஷிகா ரங்கநாத் பெருமிதம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாக்யராஜால் கலையுலகில் கவிபாட வந்த கவிதை நாயகன் | இன்று தனுஷ் 55வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கார்த்தியை கை விட்ட 'வா வாத்தியார்' | மெமரி கார்டு விவகாரத்தை விசாரணை மூலம் முடிவுக்கு கொண்டு வந்த ஸ்வேதா மேனன் | 'ஜனநாயகன்' தீர்ப்பு, அடுத்த வாரம் தான்….??? | இயக்குனர் பாண்டிராஜின் பொறுமையை சோதித்த ஜெயராம்-ஊர்வசி | 'திரவுபதி 2' படத்துக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு |

வெங்கட்பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்ஜே சூர்யா எஸ்ஏ சந்திரசேகர் மற்றும் பலர் நடிக்கும் படம் 'மாநாடு'.
இப்படம் வரும் 25ம் தேதி தமிழ், தெலுங்கில் வெளியாகிறது. இப்படத்தின் முன்பதிவு ஒரு வாரம் முன்னதாகவே ஆரம்பமாகிவிட்டது. சென்னையில் அதிகாலை 5 மணி காட்சிகளுக்கான முன்பதிவை ரோகிணி, ஜிகே சினிமாஸ் ஆகிய தியேட்டர்கள் ஆரம்பித்தன. அந்த காட்சிகளுக்கான முன்பதிவு மொத்தமாக முடிந்துவிட்டது. மற்ற தியேட்டர்களில் அதிகாலை காட்சிகளுக்கான முன்பதிவு இன்னும் ஆரம்பமாகவில்லை. அடுத்து 8 மணி சிறப்புக் காட்சிகளுக்கான முன்பதிவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
சிம்பு நடித்து இதற்கு முன்பு வெளிவந்த 'வந்தா ராஜாவாதான் வருவேன், ஈஸ்வரன்' ஆகிய படங்களுக்குக் கூட இப்படி ஒரு வரவேற்பு கிடைத்ததில்லை. இப்போது 'மாநாடு' படத்திற்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு இருப்பதால் முன்பதிவுக்கு ஆதரவு இருக்கிறது என தியேட்டர்காரர்களும் மகிழ்ச்சியாக இருக்கிறார்களாம்.