மீண்டும் வருகிறோம்- மங்காத்தா படப்பிடிப்பு புகைப்படங்களை வெளியிட்ட வெங்கட் பிரபு! | ஜனவரி 23ல் ஓடிடியில் வெளியாகும் தனுஷின் தேரே இஸ்க் மெய்ன்! | விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ்குமார் வரிசையில் கங்கை அமரன், தேவிஸ்ரீ பிரசாத் | 25 ஆண்டுகளுக்கு பின் மறுமணமா : பார்த்திபனின் 'நச்' பதில் | ஜனநாயகன் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு; நீதிமன்ற முழு வாதங்கள் இதோ... | மீண்டும் அப்பாவாகிறார் அட்லி | பிளாஷ்பேக் : ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ரகுவரன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் இரண்டு கதைகள் | ஜப்பானில் 'புஷ்பா 2' படத்திற்கு குறைவான வரவேற்பு | உண்மை சம்பவங்கள் பின்னணியில் 'மை லார்ட்' |

விஷால் நடித்த இரும்புத்திரை படம் மூலம் கோலிவுட்டில் இயக்குநராக அறிமுகமானவர் பி.எஸ். மித்ரன். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ஹீரோ படத்தை இயக்கினார். அடுத்து கார்த்தி நடிப்பில் சர்தார் படத்தை இயக்கி வருகிறார்.
சென்னை நகரம் முழுவதும் மழை வெள்ளம் சூழ்ந்திருக்க, மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியிருக்கிறது. எங்கள் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்துவிட்டது என்று மக்கள் சமூக வலைதளங்களில் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் ஆஸ்கர் விருது பெற்ற கொரிய படமான பாரசைட்டில் வரும் ஒரு காட்சியை மீமாக டுவீட் செய்திருக்கிறார் பி.எஸ். மித்ரன். அதாவது மழை பெய்ததால் காற்று மாசு குறைந்ததாக பணக்காரர்கள் சந்தோஷப்பட, ஏழை மக்களோ வீட்டிற்குள் நீர் புகுந்த கவலையில் இருப்பதை அந்த மீம் காட்டியிருக்கிறது. இந்த மீமுக்கு சமூகவலைதளங்களில் வரவேற்பு கிடைத்து வருகிறது.




