நாங்க இருக்கிறோம், ஆதரவு கொடுக்கிறோம் : அஜித்தை பார்க்க செல்லும் திரைபிரபலங்கள் | ரீ ரிலீஸில் மோதும் விஜய், அஜித் | சூர்யாவுக்கு வைத்திருந்த 'இரும்புக் கை மாயாவி', கை மாறிவிட்டதா ? | துரந்தர் 2 ஒத்தி வைக்கப்படவில்லை : வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் | பிரபாஸின் ஸ்பிரிட் பட ரிலீஸ் தேதி வெளியானது | ஜனவரி 23ல் ஓடிடியில் வெளியாகும் சிறை | கவலையில் கிர்த்தி ஷெட்டி, பிரார்த்தனா, நிதி அகர்வால், மாளவிகா மோகனன் | மெளனம் பேசியதே ரீ ரிலீஸ் ஆகிறது | அடுத்தடுத்து தனுஷ் மீது தொடரும் அவதூறுகள் | ஹீரோயின் விஷயத்தில் பிரதீப் ரங்கநாதன் கில்லாடி |

இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுள்ளார். டில்லியில் நடந்த 67வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் ரஜினிக்கு துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு விருது வழங்கி கவுரவித்தார்.
‛‛இந்த விருதை தனது குருநாதர் கே.பாலசந்தர், சகோதரர் சத்யநாராயணன், நண்பர் ராஜ் பகதூர் மற்றும் திரைத்துரையை சார்ந்த அனைத்து கலைஞர்கள், ரசிகர்களுக்கும், தன்னை வாழ வைத்த தமிழ் நெஞ்சங்களுக்கும் சமர்ப்பிப்பதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் விருதை பெற்ற பிறகு டில்லியில் ஜனாதிபாதி ராம்நாத் கோவிந்த்தை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார் ரஜினிகாந்த். இதுதொடர்பான புகைப்படங்களை ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
![]() |
விருதுகளுடன் மாமனார் - மருமகன்
தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் நடிகர் ரஜினி, தாதா சாகேப் பால்கே விருது பெற்றார். அசுரன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை தனுஷ் பெற்றார். ஒரேநேரத்தில் ஒரே விழாவில் மாமனார் ரஜினியும், மருமகன் தனுஷூம் விருது பெற்றனர். இவர்கள் இருவரும் விருதுகளுடன் போஸ் கொடுத்த போட்டோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகின.




