விஜயின் த.வெ.க கட்சியில் இணையும் திரை பிரபலம் | நீதிமன்றத்தில் உறுதி அளித்தபடி சாமுண்டீஸ்வரி கோவிலில் வழிபட்ட ரன்வீர் சிங் | போலீஸ் ஸ்டேஷனில் எங்களை மிரட்டி எழுதி வாங்கினார்கள் : திரிஷ்யம் நடிகை குற்றச்சாட்டு. | விவாகரத்துக்கு பிறகு ரூ.120 கோடி கேட்கும் முன்னாள் மனைவி அம்ரிதா : பாலா கண்ணீர் பேட்டி | கிராமத்துக் கதையில் நாயகனாக நடிக்கும் ரகுமான் | ஊர்வசியுடன் நடிக்க பயம் : ஜெயராம் | காஷ்மீர் பள்ளிக்கு ஒரு கோடி நிதி வழங்கிய அக்ஷய் குமார் | ருக்மணி வசந்த் கவர்ச்சி படங்களை வெளியிட்ட இருவர் பிடிபட்டனர் | பிளாஷ்பேக் : ரஜினியை ஹீரோவாகிய இயக்குனரை பற்றி தெரியுமா? | பிளாஷ்பேக் : எங்கே மோகனா? |

தற்போது ஆச்சார்யா படத்தை முடித்துவிட்ட சிரஞ்சீவி அடுத்ததாக மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெற்றி பெற்ற லூசிபர் படத்தின் ரீமேக்கில் நடிக்கிறார். இந்தப்படத்தை மோகன்ராஜா இயக்குகிறார். இந்தக்கதைக்கு பொருத்தமான டைட்டிலை ஆலோசித்தபோது இயக்குனரும் சிரஞ்சீவியும் உட்பட அனைவருமே 'காட்பாதர்' என்கிற டைட்டில் பொருத்தமாக இருக்கும் என முடிவு செய்தனர்.
ஆனால் அந்த டைட்டிலை ஏற்கனவே பிரபல தெலுங்கு இயக்குனர் சம்பத் நந்தி என்பவர் தனது கதைக்காக பதிவு செய்து வைத்திருந்தார். ஆனால் தனது படத்திற்கு அந்த டைட்டில் தான் பொருத்தமாக இருக்கிறது என சிரஞ்சீவியே சம்பத் நந்தியை போனில் அழைத்து பேசியுள்ளார். சிரஞ்சீவியே கேட்கும்போது அதைவிட வேறு என்ன சந்தோசம் என காட்பாதர் டைட்டிலை தருவதற்கு சம்மதித்து விட்டாராம் சம்பத் நந்தி. ஒருவழியாக டைட்டில் பிரச்சனைக்கு தீர்வு எளிதாக கிடைத்துவிட்டது.




