கோர்ட் உத்தரவை மீறி பேட்டி : மன்னிப்பு கேட்ட ரவி மோகன் | சென்னையில் தான் இருக்கிறேன், ஐதராபாத்தில் குடியேறவில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | ரேனிகுண்டா 2 படத்தின் முதல் பார்வை வெளியீடு | சூர்யாவை தொடர்ந்து அர்ஜூனுக்கும் வெற்றி : 50 கோடியை நெருங்கும் பிளாஸ்ட் | மஞ்சும்மல் பாய்ஸ் மாதிரி தமிழகத்தில் பாலன் ஓடுமா? | அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு | 'லிங்கம்' வெப் சீரீஸ் 26ம் தேதி வெளியாகிறது | இங்கிலாந்து மன்னரின் 'சர்' பட்டம் பெற்ற ஹாலிவுட் நடிகர் | பிளாஷ்பேக்: உடலால் வாழ்ந்து, உடலால் வீழ்ந்த உசிலைமணி | பிளாஷ்பேக்: முதல் பாகம் மலையாளத்தில், 2ம் பாகம் தமிழில் |

தெலுங்கு சினிமாவின் மிகப்பெரிய ஆளுமை அக்னினேனி நாகேஸ்வரராவ். அவரது மகன் நாகார்ஜூனா, பேரன்கள் அகில், நாக சைதன்யா இப்போது நடித்து வருகிறார்கள். தற்போது அவரது நூற்றாண்டு தொடங்கி உள்ளது. இதை முன்னிட்டு இந்தியாவின் மிகப்பெரிய தியேட்டர் செயின் நிறுவனங்களான பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் இணைந்து அவரது நூற்றாண்டு விழாவை கொண்டாடுகிறது. பிலிம் ஹெரிட்டேஜ் நிறுவனத்துடன் இணைந்து இதனை நடத்துகிறது.
வருகிற செப்டம்பர் 20 முதல் 22 வரை நடைபெறும், இந்த விழாவில் நாகேஸ்வரராவின் புகழ்பெற்ற வெற்றிப் படங்களை இந்தியா முழுவதும் உள்ள தங்கள் தியேட்டரில் திரையிடுகிறது. இந்த விழாவில் தேவதாசு, மாயாபஜார், பார்யா பார்த்தலு, குண்டம்மா கதை, டாக்டர் சக்கரவர்த்தி, சுடிகுண்டலு, பிரேமாபிஷேகம், பிரேம் நகர் மற்றும் மனம்க் உள்ளிட்ட பல படங்கள் பெரிய திரையில் திரையிடப்படுகிறது. சென்னை உள்ளிட்ட 31 நகரங்களில் இந்த திரையிடல் நடக்கிறது.