சிவகார்த்திகேயன் படங்களால் 120 கோடி நஷ்டம் : தயாரிப்பாளர் பகிர்ந்த தகவல் | நோட்டீஸ் அனுப்பிய ரன்வீர் சிங் : பணிந்தது தொழிலாளர்கள் கூட்டமைப்பு | கேரளாவில் ரீ ரிலீஸாகும் அல்லு அர்ஜுனின் 'ஹேப்பி' | ஜனநாயகன் ரிலீஸுக்காக காத்திருக்கும் விஜய் சேதுபதியின் ட்ரெயின் | 61 வயதில் 3வது திருமணத்திற்கு தயாரான அமீர்கான் : ஜூலை 5ல் கவுரி ஸ்ப்ராட்டை மணக்கிறார் | பரிமளா அண்ட் கோ படத்திற்கு யுஏ சான்றிதழ் | பிரேம்ஜியை காதலித்தேனா.... : உண்மையை உடைத்து பேசிய சோனா | விஜய் சேதுபதி பட தலைப்பு ‛பக்தா' வா | அடுத்தடுத்து வசூல் சாதனை படைத்த ஹாலிவுட் படங்கள் | அப்ப, ஜனநாயகன் வரலையா... : ஜூன் 19ல் நுாறு சாமி ரிலீஸ் |

மலையாள திரையுலகில் நகைச்சுவை நடிகராக வலம் வந்த நடிகர் கோட்டயம் பிரதீப் இன்று(பிப்., 17) அதிகாலை காலமானார். அவருக்கு வயது 61. மம்முட்டி, மோகன்லால், பிரித்விராஜ் உள்ளிட்ட மலையாள பிரபலங்கள் பலரும் இவரது மறைவிற்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
20 ஆண்டுகளுக்கு முன்பு ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக சினிமாவில் நுழைந்த கோட்டயம் பிரதீப் அதைத்தொடர்ந்து நகைச்சுவை நடிகராக மாறி முன்னணி நடிகர்கள் அனைவரது படத்திலும் தவறாமல் இடம்பெற ஆரம்பித்தார். 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் நகைச்சுவையில், குறிப்பாக வசன உச்சரிப்பில் தனக்கென ஒரு தனி பாணியை கடைபிடித்து ரசிகர்கள் மனதில் எளிதாக பதிந்தார்.
தமிழில் கவுதம் மேனன் இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் திரிஷாவின் கேரள உறவினராக நடித்திருந்தார் கோட்டயம் பிரதீப். அந்தப் படத்திற்கு பிறகு மலையாள திரையுலகில் அவரது மவுசு இன்னும் கூடியது. அதைத்தொடர்ந்து மீண்டும் தமிழில் தெறி படத்தில் கேரளாவில் விஜய் நடத்தும் பேக்கரியில் உதவியாளர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் தற்போது நடித்துள்ள மோகன்லாலின் ஆராட்டு படம் நாளை வெளியாக உள்ளது.




