சவுந்தர்யா பயோபிக் படத்தில் நடிக்க ஆசைப்படும் பிரியங்கா மோகன் | சிம்பு, தனுஷ் மோதல் இருக்கிறதா : சமுத்திரக்கனி பதில் | விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகாவின் ‛ரணபலி' படத்தின் முதல் பாடல் வெளியானது | துரந்தர் 2 படத்தின் முதல் விமர்சனத்தை வெளியிட்ட யாமி கவுதம் | மார்ச் 6ல் ஜீ5 ஓடிடியில் வெளியாகும் காந்தி டாக்ஸ் | பிரதமர் மோடியுடன் சந்திப்பு குறித்து ராஷ்மிகா நெகிழ்ச்சி | ஜேசன் சஞ்சய் இயக்கும் 'சிக்மா' : ஆரம்பமானதன் வரலாறு… | அதிக லைக்குகள் பெற்ற ராஷ்மிகா திருமணப் பதிவு | தென்னிந்திய இயக்குனரை தேடும் ஹிருத்திக் ரோஷன் | ரோஸ்லின் வெப் சீரிஸுக்காக எடையை குறைத்த மீனா |

தென்னிந்திய சினிமாவில் பிஸியாக நடித்து வந்த டாப்சி இப்போது ஹிந்தியில் முன்னணி நடிகையாக திகழ்கிறார். இவர் அளித்த ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது : ‛‛வாழ்நாள் முழுவதும் நடிக்க எனக்கு ஆசை கிடையாது. ஓரளவிற்கு தேவையான பணத்தை சம்பாதித்தும், ஓய்வெடுக்க முடிவெடுத்துவிட்டால் சினிமாவை விட்டு விலகிவிடுவேன். எனக்கு ஆடம்பர வாழ்க்கை பிடிக்காது. என் எண்ண ஓட்டம் நடுத்தர மக்கள் வாழ்க்கை முறையில் நின்றுவிட்டது. நான் ஒவ்வொரு பொருளையும் பார்த்து பார்த்து தான் வாங்குவேன். இன்னும் சொல்லப்போனால் நிறைய பேரம் பேசி தான் பொருட்களை வாங்குவேன். அடிக்கடி விலையுர்ந்த செல்போன், கார் என மாற்ற பிடிக்காது'' என்கிறார்.