ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்ஜிகே ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை ரகுல் பிரீத் சிங். தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என கைவசம் எட்டு படங்களுக்கு மேல் வைத்துள்ளார். இதில் ஹிந்தியில் மட்டும் ஆறு படங்களில் நடித்து வருகிறார்.
அதில் ஜான் ஆப்ரஹாமுடன் இணைந்து நடித்துள்ள அட்டாக், அஜய் தேவ்கன் டைரக்சனில் நடித்து வரும் ரன்வே 34, ஆயுஷ்மான் குரானாவுடன் நடித்து வரும் டாக்டர் ஜி மற்றும் மிஷன் சின்ட்ரெல்லா என நான்கு படங்கள் வரும் 2022ல் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன.
இதுபற்றி ரகுல் பிரீத் சிங் கூறும்போது, “கடந்த இரண்டு ஆண்டுகளாக திரையுலகின் நிலைமையே மாறிப்போய் இருந்தது.. தற்போது மீண்டும் வழக்கமான இயக்கத்திற்கு வந்துள்ளது. எனது நான்கு படங்கள் 2022ல் அடுத்தடுத்து வெளியாக இருப்பதால் அடுத்த ஆண்டு எனக்கான ஆண்டாக இருக்கும்” என்றார்.