‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து | ‛குட் பேட் அக்லி' : இளமை தோற்றத்திற்கு திரும்பும் அஜித் | தீபாவளிக்கு வெளியாகும் கவின் படம் | கனா தர்ஷனின் புதிய பட அறிவிப்பு | இளம் நாயகிகளும் பொறாமைப்படும் 'மார்கண்டேயினி' த்ரிஷா | தமிழ் ரசிகர்களைக் கவராத 'புஷ்பா… புஷ்பா…' | 'சலார்' டிவி ஒளிபரப்பு : அதிர்ச்சி தந்த டிஆர்பி ரேட்டிங் | யஷ் படத்திலிருந்து கரீனா கபூர் விலகல்? | அண்ணாமலை பயோபிக் : தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஆர்வம் | ப்ளடி பெக்கராக மாறிய கவின் |
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி, பூவே பூச்சூடவா தொடர்களில் நடித்து பிரபலமானவர் தனலெட்சுமி. இவர் கல்லூரி படிக்கும் காலக்கட்டத்திலேயே சிவா என்பவரை காதலித்து வந்தார். கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் தொடர்ந்த இவரது காதல் கதை சென்ற வருடம் தான் கல்யாணத்தில் முடிந்தது. இவர்களது திருமணம் கடந்த ஆண்டு செப்டம்பர் 14 ஆம் தேதி உற்றார் உறவினர் சூழ கோலாகலமாக நடந்தேறியது.
இந்நிலையில் திருமணமாகி ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில் சமீபத்தில் அவர்களது திருமண நாளை கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடி உள்ளனர். அதன் புகைப்படங்களையும் வீடியோவையும் தனலெட்சுமி தனது இன்ஸ்டாவில் தற்போது ஷேர் செய்துள்ளார். அதில், 'இந்த பத்து வருட காதல் மற்றும் ஒரு வருட திருமண வாழ்க்கையில் எல்லா நேரங்களிலும் என் மீது நம்பிக்கை வைத்த அன்பானவருக்கு நான் சொல்வது உங்கள் நிபந்தனையற்ற காதலுக்கு மிக்க நன்றி' என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். உண்மை காதலுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த ஜோடிக்கு பலரும் தற்போது திருமண நாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.