‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில், ஹிந்தி டிவி தொடர் நடிகை கிருத்திகா சவுத்திரி, மர்மமான முறையில் மரணமடைந்தார். ரஜ்ஜோ உள்ளிட்ட, ஹிந்தி டிவி தொடர்களில் நடித்தவர் கிருத்திகா சவுத்திரி, 27. மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில் உள்ள அந்தேரி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் அவர் வசித்து வந்தார். அவரது வீட்டின் கதவு, நான்கு நாட்களாக திறக்கப்படவில்லை. வீட்டின் உள்ளே இருந்து துர் நாற்றம் வரவே, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, அங்கு வந்த போலீசார், வீட்டின் கதவு உட்புறமாக பூட்டி இருந்ததால், அதை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு, நடிகை கிருத்திகாவின் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. இதையடுத்து, அவரது உடலை கைப்பற்றிய போலீசார், வழக்கு பதிவு செய்தனர்.அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு யாராவது, அவரை கொலை செய்தனரா என, போலீசார் விசாரித்து வருகின்றனர்.