ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் நீயா- நானா பெருவாரியான நேயர்களை கவர்ந்து வருகிறது. சமூக பிரச்சினைகள், குடும்பப் பிரச்சினைகள் என எடுத்துக்கொள்ளப்பட்டு, நேயர்களிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வருகிற ஆகஸ்ட் 15-ந்தேதி சுதந்திர தினத்தன்று ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் தனது துணைவியாருடன் கலந்து கொள்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் சினிமாவுக்கு வந்து 41 ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில், அவர் கடந்து வந்த பாதையை திரும்பிப்பார்க்கும் வகையில், நேயர் கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்கிறார்களாம். அதை தானும் அமர்ந்து கேட்கும் ரஜினி, இறுதியில் தான் கடந்து வந்த பாதையில் சந்தித்த வெற்றி தோல்விகள் குறித்து பதிவு செய்கிறாராம். இதற்கான படப்பிடிப்பு நேற்று சென்னை யில் நடந்தது.