‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
சினிமாவில் நடிகனாக என்ட்ரியான நான், தற்போது சீரியல்களில் மாறுபட்ட வேடங்களில் நடித்து வருகிறேன். சினிமாதான் எனது எதிர்கால நோக்கமாக இருந்தபோதும், சீரியல்கள் மூலம் எனது நடிப்புத்திறமையை மென்மேலும் வளர்த்துக்கொண்டு வருகிறேன் என்கிறார் நடிகர் சுரேஷ்குமார். தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி...
தேனீர் விடுதி என்ற படத்தில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நான் அறிமுகமானேன். அதன்பிறகு அடித்தளம் உள்பட சில படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்தேன். அதையடுத்து புதுக்கவிதை, பிரிவோம் சந்திப்போம், நாதஸ்வரம், கல்யாண பரிசு, வம்சம் என பல தொடர்களில் நடித்துள்ளேன். நல்லவன், கெட்டவன் என இரண்டுவிதமான கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறேன்.
அதோடு, தற்போது கனவே அப்துல்கலாம் உள்பட பல வீடியோ ஆல்பங்களுக்கு இசையமைத்த டேவிட் கிளிண்டன் இசையமைத்து, இயக்கியுள்ள ஆர் யு ஓகே பேபி -என்றொரு காதல் ஆல்பத்திலும் நடித்துள்ளேன். இதில் என்னுடன் இணைந்து மானாட மயிலாட நீத்துவும் நடித்து நடனமாடியிருக்கிறார். இந்த லவ் ஆல்பம் அருமையாக வந்திருக்கிறது. அதனால் இது யு டியூப்பில் வெளியாகும்போது சினிமா உலகில் இருந்து நான் எதிர்பார்ப்பது போன்ற ஹீரோ மற்றும் வெயிட்டான வேடங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.
மேலும், சமீபகாலமாக சின்னத்திரையில் எனது பயணம் சென்று கொண்டிருந்தபோதும் சினிமாவே முக்கிய நோக்கமாக இருப்பதால் சில டைரக்டர்களை சந்தித்து சான்சு கேட்டு வருகிறேன். குறிப்பாக சினிமாவில் விட்டதை பிடிக்க வேண்டும் என்பதுதான் எனது எண்ணம். நான் விவரம் இல்லாமல் இருந்தபோது சினிமாவை தொடராமல் விட்டு விட்டேன். ஆனால் இப்போது விவரமாக இருக்கிறேன். அதனால் இனிமேல் கிடைக்கும் வாய்ப்புகளை கெட்டியாக பிடித்துக்கொண்டு என்னை சினிமாவில் நிலைநிறுத்திக்கொள்வேன் என்கிறார் சுரேஷ்குமார்.