ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கேரளாவில் ஹிட் படங்களின் திருட்டு விசிடிகள் தொடர்ந்து வெளியாவது தயாரிப்பாளர்களை அச்சம் கொள்ள வைத்துள்ளது. நம்ம ஊரைப்போல் இல்லாமல் கேரளாவில் திருடத் விசிடி விற்பது வெகுவாக குறைவுதான். இருந்தாலும் அங்கும் சில, பைரேட் மாபியாக்கள் ஊடுருவிவிட்டார்கள். “பைரஸியை நிறுத்துங்கள் எப்படி எங்களை வேறொருவரின் யோசனைகளை, சிந்தனைகளை திருடக்கூடாது என்கிறீர்களோ, அதேபோல எங்களது படங்களையும் யாரும் திருடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு படத்திற்கு அதற்குண்டான சன்மானம் கிடைக்க வழி செய்யுங்கள்” என பிரேமம் படத்தின் திருட்டு விசிடி வெளியானபோது எதிர்ப்புக்குரல் கொடுத்தார் மம்முட்டி.
பிரேமம் பட விவகாரத்துக்குப்பின் கொஞ்சநாள் அடங்கியிருந்தபோது போல இருந்த இந்த கும்பல், இப்போது பிருத்விராஜ் நடிப்பில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் 'அமர் அக்பர் அந்தோணி' படத்தின் திருட்டு விசிடியை விற்க ஆரம்பித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த கேரளா திக்கரக்கரா போலீஸார், இந்தப்படத்தின் சிடிக்களை சப்ளை செய்த ஸ்ரீகாந்த் என்பவனை கையும் களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர். மேலும் அவன் வசம் இருந்த படத்தின் மொத்த டிவிடிகளையும் மற்றும் சில படங்களின் டிவிடிகளையும் கைப்பற்றியுள்ளனர்.