ஐஸ்வர்யா ராய்க்கு விரைவில் கையில் ஆபரேஷன் | தங்கலான் படம் ரிலீஸ் பற்றிய புதிய தகவல் | மே.29ல் வெளியாகும் ‛மழை பிடிக்காத மனிதன்' பட டீசர் | ஆகஸ்ட்டில் துவங்கும் ஜூனியர் என்.டி.ஆர் - பிரசாந்த் நீல் படப்பிடிப்பு | கல்கி 2898 ஏடி - ரோபோவுக்கு டப்பிங் கொடுத்த கீர்த்தி சுரேஷ் | விஜய்க்கு ஜோடியாகும் சூர்யா பட நாயகி | திருவண்ணாமலை கோயிலில் நடிகை ரோஜா வழிபாடு | இனி, மாதம் ஒரு பெரிய படம் ரிலீஸ் உறுதி… | வெற்றிக் கோட்டைத் தொடுவாரா 'பி.டி. சார்' | சூரி பட விழாவிற்கு வரும் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் |
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் எழில் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் வீஜே விஷால். இவருக்கு தமிழகத்தில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். எழில் என்கிற கதாபாத்திரத்தில் அம்மாவிற்கு செல்லப்பிள்ளையாக பாக்கியாவின் மகனாக கலக்கி வரும் விஷால் தற்போது தனது உண்மையான அம்மா இவர் தான் என இன்ஸ்டாவில் போட்டோ வெளியிட்டுள்ளார்.
விஷால் வெளியிட்ட அந்த புகைப்படத்தில் இருப்பது வேறு யாருமில்லை, எழுத்தாளர் பிரியாதம்பி தான். இவர் விஜய் டிவியில் சூப்பர் ஹிட் அடித்த பகல் நிலவு, பாண்டியன் ஸ்டோர்ஸ் ஆகிய சீரியல்களின் கதாசிரியர் ஆவார். தற்போது பாக்கியலெட்சுமி தொடரையும் இவர் தான் எழுதி வருகிறார். இதைத்தான் சூசகமாக சொல்லும் வகையில் எழில் கதாபாத்திரத்தை உருவாக்கிய நிஜ அம்மா என விஷால் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.