ஐஸ்வர்யா ராய்க்கு விரைவில் கையில் ஆபரேஷன் | தங்கலான் படம் ரிலீஸ் பற்றிய புதிய தகவல் | மே.29ல் வெளியாகும் ‛மழை பிடிக்காத மனிதன்' பட டீசர் | ஆகஸ்ட்டில் துவங்கும் ஜூனியர் என்.டி.ஆர் - பிரசாந்த் நீல் படப்பிடிப்பு | கல்கி 2898 ஏடி - ரோபோவுக்கு டப்பிங் கொடுத்த கீர்த்தி சுரேஷ் | விஜய்க்கு ஜோடியாகும் சூர்யா பட நாயகி | திருவண்ணாமலை கோயிலில் நடிகை ரோஜா வழிபாடு | இனி, மாதம் ஒரு பெரிய படம் ரிலீஸ் உறுதி… | வெற்றிக் கோட்டைத் தொடுவாரா 'பி.டி. சார்' | சூரி பட விழாவிற்கு வரும் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் |
எதிர்நீச்சல் தொடரில் ஜான்சி ராணி கதாபாத்திரத்தில் மிரட்டிக் கொண்டிருக்கிறார் நடிகை காயத்ரி. தவிரவும் சினிமா, வெப் தொடர்கள் என பிசியாக வலம் வரும் இவர், ஒரு பி.எச்டி பட்டதாரி ஆவார். மக்கள் மத்தியில் நற்பெயரை பெற்று வரும் காயத்ரி அடிக்கடி ஊடகங்களில் பேட்டி கொடுத்து வருகிறார். அந்த வகையில் அண்மையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் மீடூ விவகாரம் குறித்து 'நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல் கொடுமைகளை குறித்து இப்போது சொல்லி வருகிறார்களே?' என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த காயத்ரி 'ஒரு விஷயம் பிடிக்கவில்லை என்றால் அப்போதே அதை பற்றி சொல்லி விட வேண்டும். எல்லாம் முடிந்த பிறகு சொல்லி ஆறுதல் தேடுவது மிகவும் தப்பு' என்று கூறியுள்ளார். மேலும், 'அட்ஜெஸ்மெண்ட் பிரச்னைகளுக்கு காரணம் பெண்களின் வீக்னஸ் தான். மேலும் அட்ஜெஸ்மெண்ட் செய்வது அவர்களது தனிப்பட்ட விருப்பம். அதை பற்றி ஏன் நீங்கள் கேள்வி கேட்கிறீர்கள்?' என்று முன்னதாக அளித்த சில பேட்டிகளில் காயத்ரி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.