ப்ளடி பெக்கராக மாறிய கவின் | மகள் திருமணம் : ஆனந்த கண்ணீரில் ஜெயராம் | இது தந்தை பாசம் : யுவனுக்கு ஊட்டிவிடும் இளையராஜா | தேர்தலில் ஓட்டுபோடாதது ஏன்...? - ஜோதிகா விளக்கம் | அம்மாவுக்காக தான் சொன்னேன் - அதிதி | அமிதாப் உடன் ரஜினி : வேட்டையன் போட்டோஸ் வைரல் | குருவாயூர் அம்பல நடையில் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரசிகருக்கு ரூ 22,000 மதிப்பிலான ஷூ பரிசளித்த ஜான் ஆபிரகாம் | பாலகிருஷ்ணா பட இயக்குனரை அடித்தால் பத்தாயிரம் தருவேன் ; ராஜமவுலி கலாட்டா | இந்திய டி-20 அணிக்கு தேர்வான கேரள வீரருக்கு பிஜூமேனன் நேரில் வாழ்த்து |
பிரபல நடிகரான பப்லு பிருத்விராஜ் தனது காதலி ஷீத்தலுடனான உறவிலிருந்து வெளியேறியுள்ளார். இந்த செய்தி தான் கடந்த இரண்டு நாட்களாக இணையதளம் முழுவதும் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் தனது ஸ்டைலில் கிசுகிசுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பப்லு அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் பயில்வான் ரங்கநாதனை லெப்ட் ரைட் வாங்கியிருக்கிறார். அந்த பேட்டியில் பப்லு பேசியதாவது, 'பயில்வானுக்கு வேறு வேலை இல்லை. அடுத்தவர்களை தரக்குறைவாக பேசினால் தான் அவருக்கு சோறு. அசிங்கமானவர்களால் இப்படி அசிங்கமாக தான் பேச முடியும். காசுக்காக இப்படி அசிங்கமாக பேசலாமா? உன் அம்மாவையோ தங்கையையோ இப்படி ஒருவர் பேசினால் உனக்கு எவ்வளவு வலிக்கும்?' என்று கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.