காதலித்த நடிகை விபத்தில் இறக்க : தற்கொலை செய்து கொண்ட நடிகர் | 'செப்' ஆனார் ஏஆர் ரஹ்மான் மகள் ரஹீமா | சிம்பு மீது புகார் : அண்ணன், தம்பி பிரச்னை என்கிறார் ஐசரி கணேஷ் | 'இந்தியன் 2' - புரமோஷன் இன்று ஆரம்பம் | ஜுனியர் என்டிஆருக்காக விட்டுக் கொடுத்த கரண் ஜோஹர் | படம் தாமதமானதால் கண்ணீர் விட்ட கதாநாயகி | சூதாட்ட படத்தில் விஜய்சேதுபதி | விடுதலை 2ம் பாகத்தில் எஸ்.ஜே.சூர்யா? | வெற்றிமாறன் தயாரிப்பில் கவின், ஆண்ட்ரியா | பிளாஷ்பேக்: 'மூன்று முடிச்சு' படத்தின் மூலம் ஹீரோவாக்க நினைத்த பாலச்சந்தர்: மறுத்த ஜெயபாரதி |
இயக்குநர் திருச்செல்வம் எதிர்நீச்சல் தொடரின் மூலம் கம்பேக் கொடுத்து அசத்தி வருகிறார். மேலும், அதே தொடரில் ஜீவானந்தம் என்ற கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். தற்போது ஜீவானந்தம் கதாபாத்திரத்தை முக்கிய கதாபாத்திரமான ஈஸ்வரியின் முன்னாள் காதலனாக காட்டி வருகின்றனர். இதனையடுத்து ஜீவானந்தம் தான் ஹீரோவா? க்ளைமாக்ஸில் அவரும் ஈஸ்வரியும் ஒன்று சேர்வார்களா? என்றெல்லாம் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
இதற்கு பதிலளித்துள்ள திருச்செல்வம், 'ஆரம்பத்தில் ஜீவானந்தம் கதாப்பத்திரம் சில நாட்களுக்கு என்று தான் தொடங்கப்பட்டது. இப்போது கதையின் முக்கியத்துவத்துக்கு ஏற்ப பயணிக்க தொடங்கியுள்ளது. இனி வரும் நாட்களில் கதையின் போக்கு மற்றும் ரசிகர்களின் வரவேற்புக்கு ஏற்றவாறு ஜீவானந்தம் கதாபாத்திரம் தொடரும். ஆனால், அதிக நாட்கள் ஜீவானந்தம் கதாபாத்திரம் இருக்காது' என்று கூறியுள்ளார்.