கமலின் தக் லைப் படத்தின் புதிய அப்டேட் | எல்லா படங்களுக்கும் கதாநாயகி அவசியம் இல்லை : நிகிலா விமல் | ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி விட்ட பிரபாஸ் | மீண்டும் ஷாரூக்கான் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | ஆளே இல்லாத நடிகர் சூர்யா வீட்டுக்கு பாதுகாப்பு : அமைச்சரின் பரிந்துரையில் கட்டணமின்றி சலுகை | இளையராஜாவை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் | ஆவேசம் பஹத் பாசில் பாணியில் ரிலீஸ் தேதியை அறிவித்த விஸ்வக் சென் | சூர்யா படத்தில் கதாநாயகியாக இணையும் பூஜா ஹெக்டே | புஷ்பா 2 வில் இருந்து விலகிய எடிட்டர் ஆண்டனி ரூபன் ? | ஜீத்து ஜோசப் டைரக்ஷனில் பஹத் பாசில் படம் அறிவிப்பு |
தனியார் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரை நேயர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார் நடிகை மதுமிதா. இவர் அண்மையில் தனது ஆண் நண்பருடன் பயணித்துக் கொண்டிருந்த போது ஒன்வேயில் சென்று விபத்தை ஏற்படுத்தினார். இதில் காவலர் ஒருவர் காயமடைந்ததாகவும் இதனைதொடர்ந்து மதுமிதா குடித்து விட்டு காரை ஓட்டியதால் அவர் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் செய்திகள் வெளியானது.
இந்நிலையில், தற்போது அந்த விபத்து குறித்து விளக்கமளித்துள்ள மதுமிதா, ‛‛நான் குடித்துவிட்டு காரை ஓட்டியதாக சில ஊடகங்களில் தவறாக செய்திகள் வருகிறது. ஆனால், அது உண்மையல்ல. விபத்து நடந்தது உண்மை. அதில் அந்த காவலருக்கு சிறிய காயம் ஏற்பட்டது. அவர் தற்போது நலமாக இருக்கிறார். வதந்திகளை நம்பாதீர்'' என வேண்டுகோள் வைத்துள்ளார்.