யுவன் இசையில் 'கேங்ஸ் ஆப் கோதாவரி' தெலுங்குப் படம் | இரண்டு தயாரிப்பாளர்களால் கமல்ஹாசனுக்கு நெருக்கடி | நான் பணம் கேட்டேனா... ஏமாந்துராதீங்க... : எச்சரிக்கும் சிங்கம் புலி | 19ம் நூற்றாண்டு கதையில் நடிக்கும் விஜய் தேவரகொண்டா | சம்பளத்தை உயர்த்திய அனுபமா பரமேஸ்வரன் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு துவங்கியது | திருமுருகன் கொடுத்த சர்ப்ரைஸ் : பாண்டி கமல் நெகிழ்ச்சி | தலைமை செயலகத்தில் நுழைவதற்காக முற்றிலும் புதிதாக மாறிய ஸ்ரேயா ரெட்டி | மாரி 2 படத்துக்கு பின் தமிழில் நடிக்காதது ஏன் ? - டொவினோ தாமஸ் விளக்கம் | பிரபாஸ் ஒதுக்கிய வாய்ப்பால் கிடுகிடு வளர்ச்சி அடைந்த அல்லு அர்ஜுன் |
சின்னத்திரை நடிகையான ரச்சிதா மஹாலெட்சுமி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் மிகவும் பிரபலமடைந்துவிட்டார். கணவர் தினேஷுடனான சண்டையின் காரணமாக தனியே வசித்து வரும் ரச்சிதா, இப்போதெல்லாம் தனக்காக, தனது மகிழ்ச்சிக்காக மட்டுமே அதிக கவனம் செலுத்தி வருவதாக சமீபத்திய பதிவுகளில் தெரிவித்து வருகிறார். ஏற்கனவே, தனக்கு பிடித்தமான ராயல் என்பீல்ட் பைக் வாங்கில் அதில் அடிக்கடி ரைட் சென்று வரும் ரச்சிதா, தற்போது புதிதாக கார் ஒன்றை வாங்கியுள்ளார். மோரிசன் கேரஜ் கம்பெனியின் சொகுசு ரக காரான அந்த காரின் விலை 22 லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. கார் வாங்கிய ரச்சிதா, நண்பர்கள் ஷிவின், விஷ்ணு விஜய் ஆகியோருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு அதில் அவர்களுக்கு தனது நன்றியையும் தெரிவித்துள்ளார். ரச்சிதாவின் கடின உழைப்பை பாராட்டி சக நடிகர்கள் உட்பட ரசிகர்கள் பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.