ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சோஷியல் மீடியாக்களின் பெருவளர்ச்சி ஒருபுறம் பிரபலங்கள் எதை செய்தாலும் டிரெண்டாக்கி வருகிறது. இந்த செலிபிரேட்டிகளும் இதை வைத்துக்கொண்டு அநியாயத்திற்கு அல்சாட்டியம் செய்து வருகின்றனர். அந்த வரிசையில் சீரியல் வில்லி நடிகை சுப்புலெட்சுமி தன் கணவருடன் எடுத்துக்கொண்ட ப்ரீ வெட்டிங் போட்டோஷூட் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
'அழகிய தமிழ் மகள்', 'அன்பே வா' ஆகிய தொடர்களில் வில்லியாக நடித்து புகழ் பெற்றவர் நடிகை சுப்புலெட்சுமி ரங்கன். அண்மையில் இவர் ப்ரீ வெட்டிங் போட்டோஷூட் எடுத்துள்ளார். அந்த போட்டோ, வீடியோக்களை பகிர்ந்துள்ளார். அதில், சுப்புலெட்சுமியின் கணவர் மேலாடை இன்றி சிக்ஸ்பேக் உடலைக் காட்டிக்கொண்டு நிற்க, சுப்புலெட்சுமி சிக்ஸ் பேக் வயிற்றின் மீது முத்தமிடுகிறார். மேலும் இருவரும் உதட்டு முத்தமும் கொடுப்பது மாதிரியான நெருக்கமாக இருக்கும் போட்டோ மற்றும் வீடியோக்களை பதிவிட்டுள்ளனர்.
கணவன் மனைவி அந்தரங்க நெருக்கத்தை வெளிப்படையாக பொதுவெளியில் காட்டலாமா? என பலரும் சுப்புலெட்சுமியை திட்டி தீர்த்து வருகின்றனர்.