ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தமிழ்ச்செல்வி தொடர் மூலம் தமிழ் சின்னத்திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஆஷிகா படுகோன். தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழி சீரியல்களிலும் நடித்து கலக்கி வந்த ஆஷிகாவுக்கு சமீபத்தில் சேட்டன் ஷெட்டி என்பவருடன் திருமணம் முடிந்தது. திருமணத்திற்கு பிறகு ஆஷிகா நடிக்க மாட்டார் என்றே ரசிகர்கள் பலரும் கருதினர்.
இந்நிலையில் அவர் புதிய சீரியலான சிங்கப்பெண்ணே என்ற தொடரில் மீண்டும் கதாநாயாகியாக நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. எனினும், ஆஷிகாவை மீண்டும் திரையில் காணப்போகும் மகிழ்ச்சியில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். முன்னதாக சிங்கப்பெண்ணே தொடரில் பிரபல தொகுப்பாளினி டிடியின் சகோதரி பிரியதர்ஷினி நடிப்பதாக இருந்தது. தற்போது அந்த தொடரில் அவருக்கு பதிலாக ஆஷிகா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.