ஐஸ்வர்யா ராய்க்கு விரைவில் கையில் ஆபரேஷன் | தங்கலான் படம் ரிலீஸ் பற்றிய புதிய தகவல் | மே.29ல் வெளியாகும் ‛மழை பிடிக்காத மனிதன்' பட டீசர் | ஆகஸ்ட்டில் துவங்கும் ஜூனியர் என்.டி.ஆர் - பிரசாந்த் நீல் படப்பிடிப்பு | கல்கி 2898 ஏடி - ரோபோவுக்கு டப்பிங் கொடுத்த கீர்த்தி சுரேஷ் | விஜய்க்கு ஜோடியாகும் சூர்யா பட நாயகி | திருவண்ணாமலை கோயிலில் நடிகை ரோஜா வழிபாடு | இனி, மாதம் ஒரு பெரிய படம் ரிலீஸ் உறுதி… | வெற்றிக் கோட்டைத் தொடுவாரா 'பி.டி. சார்' | சூரி பட விழாவிற்கு வரும் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் |
சீரியலுக்காக பிரபல ஹீரோயின் செய்த மிகவும் ரிஸ்க்கான ஸ்டண்ட் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இன்றைய காலகட்டத்தில் படங்களை விட சீரியல்களுக்கு ரசிகர்கள் பெருகி வருகின்றனர். அதற்கேற்றார் போல் சீரியல் எடுப்பவர்களும் காட்சியின் பிரம்மாண்டத்திலும், ரிஸ்க்கான ஆக்சன் காட்சிகளையும் வைத்து வருகின்றனர். அதிலும் சமீப காலங்களில் சீரியல்களில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது. எனவே ரிஸ்க்கான சண்டை காட்சிகளில் அவர்களது பங்கும் பெருகி வருகிறது.
அந்த வரிசையில் சீரியல் நடிகை தர்ஷினி கவுடா மிகவும் ரிஸ்க்கான சண்டை காட்சியில் நடித்துள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் சில்லுன்னு ஒரு காதல் தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார் தர்ஷினி கவுடா. அந்த தொடரில் ஆழ்துளை கிணற்றில் மாட்டிக் கொண்ட குழந்தையை காப்பாற்றும் காட்சிக்காக தர்ஷிணி கவுடா இடுப்பில் கயிறை கட்டிக் கொண்டு தலைகீழாக இறங்குகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்க்கும் ரசிகர்கள் தர்ஷினியின் தைரியத்தை நினைத்து பாராட்டி வருகிறார்கள்.