படப்பிடிப்பிலிருந்து ஆட்டோவில் வீடு திரும்பிய ஸ்ருதிஹாசன் | மாயவன் 2-வாக உருவாகும் ‛மாயா ஒன்' : முதல் பார்வை வெளியீடு | சினிமாவிற்கு முழுக்கா... - கங்கனா பதில் | கலகலப்பு மூன்றாம் பாகத்தை இயக்க தயாராகும் சுந்தர்.சி | விமல் நடிப்பில் "போகுமிடம் வெகு தூரமில்லை" | நயன்தாராவின் ‛டியர் ஸ்டூடண்ட்ஸ்' படப்பிடிப்பு துவங்கியது | டில்லி ஹனுமான் கோவிலில் நடக்கும் தக்லைப் படப்பிடிப்பு | ஸ்டார் படத்திற்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் | ‛ஹவுஸ்புல் 5' - மீண்டும் அபிஷேக் பச்சனை அழைத்து வரும் சஜித் நதியத்வாலா | சீரியலை விட்டு தூக்கிய சோகத்தில் பிரியங்கா நல்காரி - நடந்தது என்ன? |
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாகவிருக்கும் புதிய தொடர் எங்க வீட்டு மீனாட்சி. இதில் பூர்ணிமா பாக்யராஜ், ஸ்ரீதா சிவதாஸ், ஜீவா உள்பட பலர் நடிக்கிறார்கள். இது காரைக்குடி செட்டிநாட்டு கூட்டு குடும்பத்தின் கதை. இந்த குடும்பத்தின் தலைவியாக வள்ளியம்மாள் என்ற கேரக்டரில் பூர்ணிமா பாக்யராஜ் நடிக்கிறார். மீனாட்சி என்கிற டைட்டில் கேரக்டரில் நடிகை ஸ்ரீதா சிவதாஸ் நடிக்கிறார். அவரது ஜோடியாக சிதம்பரம் கேரக்டரில் ஜீவா நடிக்கிறார்.
இதன் படப்பிடிப்புகள் தற்போது காரைக்குடியில் நடந்து வருகிறது. வருகிற 18ம் தேதி முதல் ஒளிபரப்பு தொடங்குகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
இந்த தொடரில் நடிப்பது குறித்து பூர்ணிமா பாக்யராஜ் கூறியதாவது: முதல் முறையாக கலர்ஸ் தமிழோடு இணைந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஒரு புத்துணர்ச்சியூட்டும் கதைக்களத்தில், திறமையான கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றுவது என்பது எப்போதுமே மகிழ்ச்சி அளிக்கிறது.
எங்க வீட்டு மீனாட்சி தொடரில் நான் நடிப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. மேலும் எனது நடிப்பை பார்வையாளர்கள் நிச்சயம் ரசிப்பதோடு எங்களுடன் இணைவார்கள் என்று நான் நம்புகிறேன். என்கிறார்.