சுந்தர்.சிக்கு முதல் ரூ.100 கோடி படமாக அமைந்த அரண்மனை 4 | அஜித்தை அடுத்தடுத்து இயக்க போகும் சிவா - மோகன் ராஜா | ‛இந்தியன் 2' முதல் பாடல் வெளியானது : ஜூன் 1ல் இசை வெளியீடு | சிம்பு 48வது படத்தில் இரண்டு பாலிவுட் ஹீரோயின்கள் | அதிரடி ஆக்ஷனுக்கு தயாராகும் சமந்தா | தக் லைப் கதையில் மணிரத்னம் செய்த அதிரடி மாற்றம் | அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய விஜய் | கவின், நயன்தாரா இணையும் புதிய படம் | வெளிநாடுகளில் ரிலீஸ் ஆகும் மாஸ்டர் | சென்னையில் 3.5 கோடிக்கு 'போர்ஷே' கார் வாங்கிய நாக சைதன்யா |
படம் வெற்றி பெறுகிறதோ அல்லது தோல்வி அடைகிறதோ என்பதை பற்றி கவலைப்படாமல் தான் நடிக்கும் படம் பேசப்பட வேண்டும் என்கிற கோணத்தில் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் நடிகை டாப்சி. அந்தவகையில் தற்போது ராஷ்மி ராக்கெட் என்கிற படத்தில் தடகள வீராங்கனையாக நடித்துள்ளார். இந்தப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் தற்போது கலந்து கொண்டு வரும் டாப்சி இந்தப்படத்தில் நடித்தபோது தன்னை உறைய வைத்த உண்மை ஒன்றையும் கூறியுள்ளார்.
அதாவது பெண் வீராங்கனைகளுக்கு நடத்தப்படும் பாலின சோதனை குறித்து தான் கேள்விப்பட்டு அதிர்ச்சியானதுடன் அதுகுறித்து சில ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டாராம். அதன்படி ஒரு பெண் வீராங்கனை போட்டியில் வெற்றி பெற்று தனது திறமையை நிரூபிப்பதற்கு முன்பாக தான் உண்மையிலேயே பெண் தான் என்பதை நிரூபிக்க வேண்டி இருக்கிறது. இந்த உண்மை என்னை உறைய வைத்தது. இந்த பாலின பரிசோதனை பயிற்சி என்பது பெண் வீராங்கனைகள் தங்களது கனவை அடைவதற்கான தடைக்காளாக இருக்கிறது என்று கூறியுள்ளார் டாப்சி.