விஜயகாந்த் மகனின் உருக்கமான ஆசை | கர்ப்பிணி பெண்களின் பேஷன் ஷோவில் கலந்து கொண்ட அமலாபால் | மம்முட்டியை இயக்கும் கவுதம் மேனன் | சிவகார்த்திகேயனை இயக்க தயாராகும் சிபி சக்ரவர்த்தி | எனக்கு பிடித்த இடம் : நயன்தாரா | 'கூலி' படப்பிடிப்புக்கு முன்பாக ரஜினிகாந்த் சிறு ஓய்வு ? | திருச்செந்தூர், கன்னியாகுமரி கோயில்களில் கணவருடன் நயன்தாரா வழிபாடு | புதுமுகங்களின் 'குற்றம் புதிது' | கன்னட ஹீரோ மீது கொடூர தாக்குதல் | சின்னத்திரை இயக்குனர்கள் சங்கத் தலைவராக மங்கை அரிராஜன் வெற்றி |
சமந்தாவும், நாகசைதன்யாவும் பிரிந்து வாழ்ந்து வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி வருகின்றன. தற்போது அவர்கள் விவகாரத்திற்காக நீதிமன்றத்திற்கு செல்ல தயாராகிக் கொண்டிருப்பதாகவும் சோசியல் மீடியாக்களில் பரபரப்பு செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதுபோன்ற செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒரு பேட்டியில் நாகசைதன்யா பதிலளித்திருந்தபோதும் சமந்தா மட்டும் இன்னமும் அமைதி காத்து வருகிறார்.
இந்தநிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராமில் தான் வளர்த்து வரும் இரண்டு செல்ல நாய்க்குட்டிகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சமந்தா. ஹாஷி- ஷாஷா என்று பெயரிடப்பட்டுள்ள அந்த இரண்டு நாய்களும் சகோதர பாசத்துடன் பழகி வருவதாக தெரிவித்துள்ள சமந்தா, இத்தனை சீக்கிரம் இந்த இரண்டு நாய்களும் நன்றாக பழகி சேர்ந்து இருக்கும் என நான் நினைக்கவில்லை. இந்த இரண்டு நாய்களும் சகோதர பாசத்துடன் பழகி வருவதே எனக்கு கிடைத்த ஆசீர்வாதம் என்று நினைக்கிறேன். அதோடு, இந்த இரண்டு நாய்களுமே ஒவ்வொரு நாளும் எனக்கு ஏதாவது புதிய விசயங்களை கற்றுக்கொடுத்து வருகின்றன என்றும் தெரிவித்துள்ளார் சமந்தா.