ஸ்டார் படத்தின் முதல்வார வசூல் நிலவரம் இதோ | பத்து நாளில் 55 கோடி வசூலித்த அரண்மனை 4 | திரிஷாவின் ஐடென்டிட்டி படப்பிடிப்பு நிறைவு | நடிகர் சங்கத்திற்கு தனுஷ் ரூ.1 கோடி நிதி | மே 17 ரிலீஸ் : இந்த வாரமும் மக்கள் தியேட்டர்களுக்கு வருவார்களா? | நான் எந்தக் கட்சியும் சாராதவன் - அல்லு அர்ஜுன் விளக்கம் | மீண்டும் தமிழுக்கு வரும் திகங்கனா சூரியவன்ஷி | சினிமாவில் தொடர்ந்து நடிக்காதது ஏன் : மோகன் விளக்கம் | தமிழில் வெளியாகும் 'டபுள் ஐ-ஸ்மார்ட்' | பின்னணி பாடகர் வேல்முருகன் கைது |
சாணிக்காயிதம் படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ள டைரக்டர் செல்வராகவன் அதையடுத்து விஜய்யின் பீஸ்ட் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இதன்பிறகு தனுஷை வைத்து நானே வருவேன் என்ற படத்தை இயக்கப்போகிறார். இந்த நிலையில் செல்வராகவன் டுவிட்டரில் தற்போது வெளியிடுள்ள ஒரு பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், ‛‛இன்னொருவர் இருந்தால்தான் நிம்மதி என்று ஒரு பொழுதும் நினைத்து விடாதீர்கள். உண்மையில் அதைப்போல் ஒரு இம்சை எதுவும் இல்லை. தனிமையில் இருப்பதே பேரின்பம். பெரும் நிம்மதி'' என்று பதிவிட்டுள்ளார்.
செல்வராகவனின் இந்த பதிவில் தனியாக இருப்பதே நிம்மதி என்று பதிவிட்டிருப்பதால் ஒருவேளை குடும்ப வாழ்க்கையில் சலசலப்பு ஏற்பட்டதின் விளைவாகத்தான் இப்படியொரு பதிவு போட்டுள்ளாரோ? என்று சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.