கமலின் தக் லைப் படத்தின் புதிய அப்டேட் | எல்லா படங்களுக்கும் கதாநாயகி அவசியம் இல்லை : நிகிலா விமல் | ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி விட்ட பிரபாஸ் | மீண்டும் ஷாரூக்கான் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | ஆளே இல்லாத நடிகர் சூர்யா வீட்டுக்கு பாதுகாப்பு : அமைச்சரின் பரிந்துரையில் கட்டணமின்றி சலுகை | இளையராஜாவை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் | ஆவேசம் பஹத் பாசில் பாணியில் ரிலீஸ் தேதியை அறிவித்த விஸ்வக் சென் | சூர்யா படத்தில் கதாநாயகியாக இணையும் பூஜா ஹெக்டே | புஷ்பா 2 வில் இருந்து விலகிய எடிட்டர் ஆண்டனி ரூபன் ? | ஜீத்து ஜோசப் டைரக்ஷனில் பஹத் பாசில் படம் அறிவிப்பு |
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் நேற்று அகமதாபாத் நகரில் உள்ள மோடி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இறுதி ஆட்டத்தில் இந்தியாவை எதிர்த்து விளையாடிய ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கிரிக்கெட் போட்டி என்றாலே நமது பல சினிமா பிரபலங்கள் அது பற்றி அவர்களது கருத்துக்களை வெளியிடுவார்கள். உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெறும் என்று எதிர்பார்த்த நிலையில் அதிர்ச்சித் தோல்வியடைந்ததால் பலரும் வருத்தத்தில் இருக்கிறார்கள்.
இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இத் தோல்வி குறித்து, “நேற்று கிரிக்கெட்டில் தோற்றபிறகு அழுது கொண்டே இருந்தேன். என் குழந்தைகளுக்கு புரியவில்லை. தந்தை அழுது அவர்கள் பார்த்தது இல்லை. பாவம். அது கிரிக்கெட்டில் தோற்றதற்கு வரும் கண்ணீர் அல்ல. என் நாடு தோற்பதை என்னால் பார்க்க முடியவில்லை. அதில் வரும் வலியை சொல்ல இயலாது. நெஞ்சம் உடைந்து சிதறியது,” என மிகவும் மன வருத்தத்தில் பதிவிட்டுள்ளார். அவரைப் போலவே பலரும் அவர்களது வருத்தமான பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.