ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் |
கொரோனா முதல் அலை முடிந்து அனைவரும் சற்று ரிலாக்ஸ் ஆவதற்கு முன்பே தொடர்ந்து இரண்டாவது அலையும் ஆதிக்கம் செலுத்தியதால் மக்களின் வாழ்க்கை முறையே மாறி போனதோடு, வீட்டிலேயே முடங்கி கிடக்கும் சூழலும் ஏற்பட்டது. திரையுலக பிரபலங்களும் படப்பிடிப்பு, பார்ட்டிகள், சுற்றுலா என எங்கும் செல்ல முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர். தற்போது கொரோனா இரண்டாவது அலை முடிந்து ஓரளவு இயல்பு நிலை திரும்பியுள்ளது.
இதையடுத்து கொரோனா இரண்டாவது அலையின் போது பார்சிலோனா நகரத்தில் மாட்டிக்கொண்ட நடிகை ஸ்ரேயா மற்றும் அவரது கணவர் இருவரும் தற்போது இந்தியா திரும்பியுள்ளனர். வந்தவுடனே நண்பர்களுடன் பார்ட்டிகளில் கலந்து கொண்டு மகிழ்ந்த ஸ்ரேயா அதை தொடர்ந்து திருப்பதி கோவிலுக்கு தனது கணவர் மற்றும் குடும்பத்தாருடன் சென்று ஏழுமலையானை தரிசித்துள்ளார். ஸ்ரேயாவுடன் அவரது ரஷ்ய கணவரும் இந்து பாரம்பரிய முறைப்படி உடையணிந்து கோவிலில் தரிசனம் செய்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.