அம்மாவுக்காக தான் சொன்னேன் - அதிதி | அமிதாப் உடன் ரஜினி : வேட்டையன் போட்டோஸ் வைரல் | குருவாயூர் அம்பல நடையில் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரசிகருக்கு ரூ 22,000 மதிப்பிலான ஷூ பரிசளித்த ஜான் ஆபிரகாம் | பாலகிருஷ்ணா பட இயக்குனரை அடித்தால் பத்தாயிரம் தருவேன் ; ராஜமவுலி கலாட்டா | இந்திய டி-20 அணிக்கு தேர்வான கேரள வீரருக்கு பிஜூமேனன் நேரில் வாழ்த்து | விஜயகாந்த் நினைவிடத்தில் பாலா நெகிழ்ச்சி செயல்! | கணவருடன் பிறந்தநாள் கொண்டாடிய ப்ரியங்கா நல்காரி | இவ்வளவு வைரலாகும் என நினைக்கவேயில்லை : தர்ஷனா | டீச்சராக மாறி வகுப்பெடுக்கும் கேப்ரில்லா செல்லஸ் |
புதியவரான சிபி சக்கரவர்த்தி என்பவரது இயக்கத்தில் தற்போது டான் என்கிற படத்தில் நடித்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக பொள்ளாச்சி ஆனைமலை பகுதிகளில் நடைபெற்று வந்தது. ஆனால் அதிக கூட்டம் கூடியதன் காரணமாகவும், அனுமதியின்றி படப்பிடிப்பு நடத்தியதன் காரணமாகவும் அபராதம் விதிக்கப்பட்டு நேற்று படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கிடைத்த இடைவெளியில் ஆனைமலையில் உள்ள புகழ்பெற்ற மாசாணியம்மன் கோவிலுக்கு சென்று அம்மனை தரிசித்துள்ளார் சிவகார்த்திகேயன். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி வைரலாகியுள்ளது.