கதாசிரியர் ஆன தமன் | பிளாஷ்பேக் : தமிழில் ஹீரோவாக நடித்த விஷ்ணுவர்தன் | பிளாஷ்பேக் : சிவாஜி பட தலைப்பில் நடித்த எம்.ஜி.ஆர் | குறுக்கு வழியில் முன்னேறும்போது 4 வருடம் போராடி ஜெயித்துள்ளேன் : புதுமுக நடிகை அதிரடி | ஹரிஹர வீரமல்லு - எந்த 'கட்'டும் இல்லாமல் ‛யு/ஏ' சான்று | ‛புதிய பயணம்...' : ரஜினியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற கமல்ஹாசன் | ‛இந்தியன் 3' : மீண்டும் உருவாக ரஜினிகாந்த் தலையீடு | ஜெனிலியா எதிர்பார்க்கும் வேடம்... : மீண்டும் தமிழில் நடிக்க வருவாரா? | சினிமா டிக்கெட் கட்டணம் : கர்நாடகாவில் புதிய அறிவிப்பு | ஒரு பாடலுக்கு நடனமாடிய முன்னணி கதாநாயகிகள் : யார் நடனம் அசத்தல்? |
ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட், ஒலிவியா மோரிஸ், அஜய் தேவகன் மற்றும் பலர் நடிக்கும் படம் 'ஆர்ஆர்ஆர்'. சுதந்திரப் போராட்ட காலத்து கதையாக உருவாகி வரும் இப்படத்தின் கடைசி கட்டப் படப்பிடிப்பு தற்போது உக்ரைன் நாட்டில் நடைபெற்று வருகிறது.
அக்டோபர் மாதம் 13ம் தேதி வெளியாக உள்ள இப்படத்திற்கான பிரமோஷன்களை படக்குழு ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டது. கடந்த வாரம் 'நட்பு' என்ற தலைப்பில் ஐந்து மொழிகளில் ஒரு பிரமோஷன் வீடியோவை வெளியிட்டார்கள்.
அடுத்து ஆர்ஆர்ஆர் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் பொறுப்பை இன்று முதல் ஜுனியர் என்டிஆர் ஏற்றுக் கொள்கிறார். அதில் அவரது பட அனுபவங்களையும், சில தகவல்களையும் அவர் வெளியிட உள்ளார். அடுத்த சில நாட்களுக்கு இது தொடர உள்ளதாம். அதற்கடுத்து ராம் சரண், ஆலியா பட் உள்ளிட்ட மற்ற நட்சத்திரங்கள் அதைச் செய்ய உள்ளார்களாம்.
'பாகுபலி' படத்திற்கு பல புதுவிதமான பிரமோஷன்களைச் செய்து அந்தப் படத்தை 1000 கோடி ரூபாய்க்கு அதிகமான வசூலைப் பெற்றார்கள். இப்போது 'ஆர்ஆர்ஆர' படத்திற்கு இன்னும் புதிதான பிரமோஷன்களைச் செய்து ரசிகர்களைக் கவர உள்ளார்கள். 'பாகுபலி' படத்தை விட 'ஆர்ஆர்ஆர்' படத்தை அதிக வசூல் ஈட்டச் செய்ய வேண்டும் என்பது படக்குழுவின் அதிகபட்ச ஆசை என்கிறார்கள்.