ரஜினிக்கு கோல்டன் விசா வழங்கி யுஏஇ அரசு கவுரவிப்பு | தனி ஒருவன் 2ம் பாகத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர்? | மீண்டும் ஜோடி சேரும் அஜித் - நயன்தாரா ஜோடி | விஜய்க்கு நான் யார்? : ரகசியம் உடைத்த வைபவ் | விஜய் தேவரகொண்டாவுக்காக டப்பிங் பேசிய தம்பி | லூசிபர் 2 ரிலீஸ் எப்போது? ; மோகன்லால் தகவல் | எம்ஜிஆர் - சிவாஜிக்கே செட்டாகாத போது எனக்கு மட்டும் எப்படி? ராமராஜன் கேள்வி | 'இந்தியன் 2' இசை விழாவில் ரஜினிகாந்த், ராம் சரண்? | தெலுங்கு, தமிழில் அனிருத்தின் அடுத்தடுத்த அதிரடி | அதிகாலை காட்சிகளை ரத்து செய்யும் தெலுங்கானா தியேட்டர்கள் |
ஆல்பம் இசை கலைஞராக இருந்து திரைப்பட இசை அமைப்பாளர், நடிகர், இயக்குனர் என பல அவதாரங்களை எடுத்தவர் ஹிப் ஆப் தமிழா ஆதி. அவர் தற்போது இயக்கி , நடித்து வரும் படம் சிவகுமாரின் சபதம். இதில் மாதுரி அவரது ஜோடியாக நடிக்கிறார். படத்தின் பணிகள் நிறைவடைந்து விட்ட நிலையில் ஒவ்வொரு பாடலாக வெளியிட்டு வருகிறார் ஆதி.
முதலில் வெளியிடப்பட்ட இரண்டு சிங்கிள் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது மூன்றாவது பாடலாக “நெருப்பா இருப்பான்” வெளியிடப்பட்டுள்ளது. இந்த ரொமாண்டிக் வகை பாடலை பத்மலதா பாடியுள்ளார். நாயகி (மாதுரி ) நாயகனை (ஆதி) காதலித்து, அவரது அழகை மற்றும் போற்றத்தக்க பண்பை, நினைந்துருகி பாடுவதாக வரும் பாடல் இது.
படத்திற்கு அருண்ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டி.ஜி.தியாகராஜன், செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் ஆகியோர் தயாரித்துள்ளனர். விரைவில் வெளிவர இருக்கிறது.