சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
அசோக் செல்வன், அபி ஹாசன், மணிகண்டன், பிரவீன் ராஜா, ரிய்த்விகா, அஞ்சு குரியன், ரியா, நாசர், இளவரசு, பானுப்ரியா மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் நடித்துள்ள படம் சில நேரங்களில் சில மனிதர்கள். அறிமுக இயக்குனர் விஷால் வெங்கட் இயக்கியுள்ளார்.
படம் பற்றி அவர் கூறியிருப்பதாவது: இரண்டு நாளில் நடக்கும் ஹைப்பர்லிங்க் கதை. ஒரே சம்பவத்தில் சம்பந்தப்படும் வெவ்வேறு மனிதர்களின் தனித்தனி கதை. படத்தில் வரும் கதாபாத்திரங்கள் நாம் அன்றாடம் சந்திப்பவர்களாக இருப்பார்கள். இதனால் பார்வையாளர்கள் படத்தோடு தங்களை பொருத்திக் கொள்வார்கள். அனுபவம் வாய்ந்த கலைஞர்கள் புதுமுக இயக்குனரின் படம் என்று பார்க்காமல் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்து நடித்துக் கொடுத்தார்கள்.
விக்ரம் வேதா படத்திற்கு வசனம் எழுதிய மணிகண்டன், இப்படத்திற்கான வசனங்களை எழுதியுள்ளார். கே.டி (எ) கருப்புதுரை படத்தில் பணியாற்றிய மெயேந்திரன் கெம்புராஜ் இப்படத்தின் ஒளிப்பதிவாளராகவும், அர்ஜுன் ரெட்டி புகழ் ராதன் இசை அமைப்பாளராகவும் பணியாற்றி உள்ளனர். படப்பிடிப்பை ஜனவரி மாதமே தொடங்கி விட்டோம். கொரோன 2வது அலையால் படப்பிடிப்பை நிறுத்தி வைத்திருந்தோம். இப்போது மீண்டும் பணிகளை தொடங்கி உள்ளோம். என்றார்.